blank'/> muhilneel: பிள்ளையார் என்று பெயர் வரக் காரணம்

Wednesday, September 4, 2013

பிள்ளையார் என்று பெயர் வரக் காரணம்







ஒரு முறை பார்வதி தேவி குளிக்கச் சென்றார். அப்போது காவல் காப்பதற்கு பணிப்பெண்கள் இல்லை. எனவே பார்வதி தேவி தனது உடம்பில் உள்ள அழுக்கால், ஒரு சிறுவன் உருவத்தை உருவாக்கி, அதற்கு உயிர் கொடுத்து காவலுக்கு வைத்தார்.


அந்தச் சிறுவனும் காவல் காத்துக் கொண்டிருக்கையில், கைலாயத்தில் நீண்ட நாள் தவம் புரிந்துவிட்டு சிவபெருமான் வந்தார். வாசலில் ஒரு சிறுவன் இருப்பதைப் பார்த்தவாறு  உள்ளே செல்ல முயன்றார். அப்போது, அச்சிறுவன் தடுக்கவே, ஆத்திரமடைந்த சிவபெருமான், சூலத்தால் அவனது தலையை துண்டித்தார்.அதன் பின் தான், அச்சிறுவன் பார்வதி தேவியின்  மைந்தன் என்பதை அறிந்தார்.

சக்தியின் ஆத்திரத்திற்கு பயந்த சிவபெருமான், தனது பூதகணங்களை அனுப்பி தாங்கள்  பூமியில்  காணும் முதல் உயிரினத்தின் தலையினைத் துண்டித்து வருமாறு அனுப்பினார்.பூமிக்கு வந்த அவர்கள் முதலில் கண்டது ஓர் யானையை.சிவபெருமான் கட்டளைக்கேற்ப யானையின் தலையை துண்டித்து எடுத்துச் சென்றனர்.

சிவபெருமான் அந்த யானையின் தலையை சிறுவனுக்குப் பொருத்தி, உயிர் கொடுத்தார்.அப்போது குளித்துவிட்டு வந்த பார்வதி தேவி, யானைத் தலையுடன் கூடிய சிறுவனைப் பார்த்து "பிள்ளை  யார்?" என்று கேட்டார்.

அப்படி பார்வதி தேவி கேட்ட கேள்வியை  தான், சிவபெருமான் பார்வதி தேவியின் மைந்தனுக்கு " பிள்ளையார்" என்று பெயர் சூட்டி தனது குடும்பத்தில் ஒருவராக ஏற்றுக் கொண்டார்.

அப்படி பிள்ளையார் உருவான நாளையே பிள்ளையார் சதுர்த்தி என நாம் கொண்டாடி மகிழ்கிறோம்.


3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை...

திண்டுக்கல் தனபாலன் said...

உங்கள் தளம் .in என்று முடிவதால் தமிழ்மணம் இணைப்பதிலும், ஓட்டு அளிப்பதிலும் சில மாற்றங்கள் html-ல் செய்ய வேண்டும்... தொடர்பு கொள்ளவும்... dindiguldhanabalan@yahoo.com நன்றி...

Tamizhmuhil Prakasam said...

@ திண்டுக்கல் தனபாலன்

தங்களது வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் ஐயா.

Post a Comment