blank'/> muhilneel: March 2015

Wednesday, March 25, 2015

பயன்மிகு இணையவழிச் சேவைகள் - வரைபடங்கள்



 இணையம் - இன்று பலதரப்பட்ட மனிதர்களால், பலதரப்பட்ட தேவைகளுக்காக பயன்படுத்தப் படுகிறது. இணையம் இன்று உலகத்தினை நம் உள்ளங்கைகளுக்குள் கொண்டு வந்து விடுகிறது.  நமது அன்றாட வாழ்வில், பலவகையான தேவைகளுக்காக நாம் இணையத்தினை பயன்படுத்துகிறோம். நமது தேவைகளை பூர்த்தி செய்யும் வண்ணம் பல நிறுவனங்கள் செயல் படுகின்றன. அவற்றில் சில நிறுவனங்கள் சேவைக் கட்டணம் வசூலிக்கினறன, சில நிறுவனங்கள் இலவச சேவையாக செய்கின்றன.

இக்கட்டுரையில்,  இலவச வரைபட ( Maps ) உதவிகள் வழங்கும் நிறுவனங்கள் குறித்து காணலாம்.

முதல் நிறுவனம், நாம் அனைவரும் அறிந்த கூகுள் (Google). இவர்கள் வழங்கும் வரைபட சேவை கூகுள் மேப்ஸ் (Google Maps). 

கூகுள் மேப்ஸ் இணைய தளத்தின் முகவரி : maps.google.com

கூகுள் வரைபடத்தின் உதவியுடன் நாம் ஓரிடத்திலிருந்து, மற்றோர் இடத்திற்கு செல்வதற்கான வழித்தடங்கள், அவ்விரு இடங்களுக்கும் இடையே உள்ள தூரம், செல்ல ஆகும் காலம் போன்றவற்றை கணக்கிடலாம். 

நடந்து செல்ல விரும்புவோருக்கு வழித்தட உதவி, செல்ல ஆகும் கால நேரம், அதேபோல், வாகனங்களில் செல்வதானல் ஆகும் கால நேரம் போன்றவற்றை கணித்து தருகிறது. 

அவ்வழித்தடங்களில் செயல்படும் போக்குவரத்து சேவைகள், நாம் கிளம்பும் இடத்திற்கு அருகில் இருக்கும் பேருந்து நிறுத்தம், அந்த நிறுத்தத்திற்கு பேருந்து வரும் நேரம், அது செல்லும் வழித்தடம், வழித்தடத்தில் இருக்கும் ஏனைய நிறுத்தங்கள், ஒவ்வொரு நிறுத்தத்திற்கும் செல்ல ஆகும் கால அளவு போன்ற விபரங்களையும் கணித்து தருகிறது. 

எடுத்துக்காட்டாக, சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்திலிருந்து, வடபழனி முருகன் கோவிலுக்கு செல்லும் வழித்தட விபரங்கள் கூகுள் வரைபடங்களின் உதவியுடன் கீழ்க்கண்டவாறு:


இந்த வரைபடத்தில், இரண்டு வழித்தடங்கள் உள்ளன. இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் வழித்தட விபரங்கள், போக்குவரத்து நேரமும் நீல நிறத்தில் காட்டப்பட்டிருக்கும் வழித்தடத்திற்கானவை. அதற்குக் கீழே இருக்கும் மற்றோர் வழித்தடம் குறித்த விபரங்கள் அறிய விரும்பினால், அதன் மீது  சுட்டியினை வைத்தால், அதன் விபரங்கள் காண்பிக்கப்படும். காரில் செல்ல ஆகும் நேரம் 24 நிமிடங்கள் , கடக்கும் தூரம் 10.1 கி. மீ. பேருந்தில் செல்ல ஆகும் நேரம் 58 நிமிடங்கள், ஒவ்வொரு 10 நிமிடத்திற்கும் ஓர் பேருந்து வசதி உண்டு  போன்ற விபரங்களை நமக்கு இந்த வரைபடம் அளிக்கின்றது. 

இது  வாகனங்களில் செல்வதானல் உதவும் வழித்தடம்.


இது  பேருந்தில் செல்வதானால் உதவும் வழித்தடம்.



இந்தப் படம்  இரயில் நிலையத்திலிருந்து வடபழனி முருகன் கோயிலுக்கு செல்ல  பேருந்து ஏற வேண்டிய நிறுத்தம், பேருந்து அந்த குறிப்பிட்ட நிறுத்தத்திற்கு வரும் நேரம், பேருந்து எண்கள் மற்றும் அவை செல்லும் இடங்களின் விபரம், இடையில் இருக்கும் நிறுத்தங்களின் எண்ணிக்கை, செல்ல ஆகும் கால நேரம், இறங்கும் இடம், இறங்கிய இடத்திலிருந்து நடக்க வேண்டிய தூரம், நடக்க ஆகும் நேரம் போன்ற விபரங்களையும் வழங்குகிறது.

மேலும், நாம் தேடும் வழித்தடத்தில்  மின் இரயில் ( Electric Trains ) திட்டம் இருப்பின், அது குறித்த விபரங்களையும் வழங்குகிறது.


கூகுள் வரைபடங்கள் உதவியுடன் கிடைக்கும் இன்ன பிற சேவைகள் :

குரல் மூலம் வழி நடத்தும்  கூகுள் வரைபடங்கள் ( Google Voice Navigation )

                      கூகுள் வரைபடங்கள், குரல் மூலம் வழிகாட்டும் வசதியை நமக்கு அளிக்கின்றன. தற்சமயம், இந்த வசதி ஆன்ட்ராய்ட்( Android ) இயக்க அமைப்பில் ( Operating System ) கிடைக்கிறது. இவற்றை, ஆன்ட்ராய்ட் தொலைபேசிகள் ( Android Phones ) மற்றும் ஆன்ட்ராய்ட் வரைவு லக்கமாக்கிகள் ( Android tablets ) ஆகியவற்றில் பயன் படுத்தலாம்.

 தற்சமயம் இந்த வசதி  அகமதாபாத், பெங்களூரு,  போபால், சண்டிகர், சென்னை, கோயமுத்தூர், டில்லி, ஐதராபாத், இந்தூர், ஜெய்பூர், கொல்கத்தா, மும்பை, மைசூர், நாக்பூர், பூனா, சூரத், திருவனந்தபுரம், வதோதரா, விசாகப்பட்டினம்  ஆகிய இந்திய நகரங்களுக்கு கிடைக்கிறது. இந்த வசதி ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் கிடைக்கிறது.

கூகுள் எர்த் ( Google Earth) மற்றும் கூகுள்   வீதி  வரைபடங்கள் ( Google Street View maps )

    கூகுள் வீதி வரைபடங்கள் உலகின் தெருக்களை ,  அவற்றின் அமைப்புகளை அப்படியே காட்டும். நாம் புதிதாக ஓர் இடத்திற்கு / நாட்டிற்கு செல்ல இருக்கிறோம் எனில், அங்கு நாம் செல்லும் இடம் / தெரு / இடத்தின் முகவரி தெரியுமேயானால், வீதி வரைபடங்களின் உதவியுடன், நாம் செல்லவிருக்கும் இடம் நேரில் பார்க்க எப்படி இருக்கிறது, அந்த இடத்திற்கு அருகில் இருக்கும் கடைகள், பல்பொருள் அங்காடிகள், மருத்துவமனைகள், உணவகங்கள் போன்ற அடிப்படை தேவைகள் குறித்தும் அறிந்து கொள்ளலாம்.


                                    எடுத்துகாட்டாக, அமெரிகாவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் உள்ள பிரிட்ஜ்வாட்டர் என்ற இடத்தில் இருக்கும் அருள்மிகு வெங்கடேஸ்வரர் கோயிலின் தோற்றம் கூகுள் வரைபடத்தின் தெருப் பார்வையில் மேற்கண்டவாறு தெரிகிறது.    

                              
         இந்த வரைபடத்தில் கீழே வரைபடத்தின் வலது பக்க ஓரத்தில் சிறியதாக மஞ்சள் நிறத்தில் மனித உருவம் போன்ற குறியீடு உள்ளது. அதன் பெயர் பெக்மேன் (peg man). அக்குறியீட்டினை எடுத்து வந்து வரைபடத்தில் நீல நிற பாதையில் விட்டால், அந்த பாதை உண்மையில்  எப்படி இருக்கிறதோ அப்படியே  நமக்கு காட்டும். அதுவே கூகுளின் தெருப்பார்வை ஆகும்.


   இது அக்கோயிலின் வெளிப்புறத் தோற்றத்தின் புகைப்படம்.


நன்றி, இப்புகைப்படம் yelp.com ல் இருந்து எடுக்கப்பட்டது.



http://www.tamilcc.com/2015/03/gateway-of-india-googlestreetview.html




 கூகுள் உள்ளரங்க வரைபடங்கள் ( Google Indoor Maps )

                          முக்கிய கட்டிடங்களின் உள்ளரங்க வரைபடங்கள் ( Floor Plans ) நமக்கு கூகுள் உள்ளரங்க வரைபடங்களின் உதவியுடன் கிடைக்கிறது. தற்சமயம் இந்தியாவில் இவ்வசதி சில குறிப்பிட்ட வணிக வளாகங்கள் (Malls) , அருங்காட்சியகங்கள் (Museums), விமான நிலையங்கள் (Airports)  ஆகியவற்றிற்கு கிடைக்கிறது. இது குறித்த விபரங்கள் நமக்கு கீழ்காணும் இணைய பக்கத்தில் கிடைக்கிறது.

https://support.google.com/gmm/answer/1685827?hl=en


ரெயில் ராடார் ( Rail Radar)

                            இந்தியன் இரயில்வே நிறுவனத்தார், கூகுள் வரைபடங்களின் உதவியுடன் உருவாக்கிய தகவல் தளம் ரெயில் ராடார். நாம் ஓர் குறிப்பிட்ட இரயில் குறித்த விபரங்களை அறிந்து கொள்ள இந்த தளம் உதவுகிறது. எடுத்துக்காட்டாக, ஒரு இரயில் கிளம்பிய இடம், கிளம்பிய நேரம், அடுத்து வரவிருக்கும் இரயில் நிலையம், இரயில் செல்லும் வழியில் இருக்கும் ஏனைய இரயில் நிலையங்கள், அந்நிலையங்களுக்கு செல்லும் நேரம்,  அங்கிருந்து கிளம்பும் நேரம் போன்ற விபரங்களை வழங்குகிறது.

             இந்த வசதி கூகுள் வரைபடங்களின் உதவியுடன் வழங்கப் பட்டு வந்தது. வரைபடத்தில் இரயில் செல்லும் பாதை, தற்சமயம் இரயில் இருக்கும் இடம், சரியான நேரத்தில் இலக்கை சென்றடையுமா அல்லது காலதாமதங்கள் இருக்கக் கூடுமா போன்ற விபரங்களையும் வழங்கியது. ஆனால், தற்சமயம் இந்த சேவை நிறுத்தப்பட்டு விட்டது.

வரைபடம் இல்லாது, இரயில்  குறித்த விபரங்கள் மட்டும் தற்சமயம் கிடைக்கிறது.

இந்த சேவையை கீழ்காணும் இணையதளத்தில் பெறலாம்.

 http://enquiry.indianrail.gov.in/ntes/ 

 கூகுள் மேப் மேக்கர்

 இந்த சேவையை பயன்படுத்தி, நாமே வரைபடத்தில் புதிதாக விபரங்களை சேர்க்கவோ, ஏற்கனவே இருக்கும் விபரங்களை மாற்றி அமைக்கவோ முடியும்.
ஒரு பகுதியில் கிடைக்கும் சேவைகள், எடுத்துக்காட்டடாக, உணவகங்கள், பல்பொருள் அங்காடிகள்,பள்ளிகள், மருத்துவமனைகள்/மருத்துவர்கள் குறித்த விபரம், சாலைகள்,ஒரு குறிப்பிட்ட பாதைக்கான பேருந்து அல்லது இரயில் சேவைகள்,
நகரின் முக்கியமான கட்டிடங்கள், வங்கிகள்,வங்கிகளின் தானியங்கி பணம் எடுக்கும் எந்திரங்கள் இருக்கும் இடங்கள் போன்ற விபரங்களை பயனாளர்கள் உள்ளீடு செய்யலாம்.அந்த விபரங்களை கூகுள் நிறுவனம் சரி பார்த்து ,பின்னர் அவ்விபரங்களை வரைபடங்களில் பயன்பாட்டுக்கு கொண்டு வரும்.


www.google.com/mapmaker


மேற்குறிப்பிட்ட அனைத்து சேவைகளும் கூகுள் நிறுவனத்தாரால் வழங்கப்படும்  கூகுள் வரைபடங்கள் மூலம் கிடைக்கப் பெறலாம்.

இனி, இலவச வரைபட  சேவைகள் வழங்கும் இன்னபிற நிறுவனங்கள் / வலைதளங்கள் குறித்து காணலாம்.

1. மேப் க்வெஸ்ட் ( Map Quest )  www.mapquest.com
2.  யாகூ மேப்ஸ் ( Yahoo Maps )  https://maps.yahoo.com/
3.  பிங் ( Bing ) ( MSN நிறுவனம் வழங்கும் சேவை) http://www.bing.com/maps/ 
4. மேப் மை இந்தியா மேப்ஸ் ( MapmyIndia Maps) http://maps.mapmyindia.com/
         இதில் வழித்தட விபரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
5. ஹியர் (Here ) (Nokia நிறுவனம் வழங்கும் சேவை) https://www.here.com


இக்கட்டுரை வல்லமை மின்னிதழில் வெளியாகியுள்ளது.

http://www.vallamai.com/?p=55739



Thursday, March 19, 2015

Spring - Scrapbook Page

I thought of creating a scrapbook page for spring. Here is my first try on making a scrapbook page.
I have used an old directory for creating this.

I started with  applying my home made gesso allover the page and allowed it to dry overnight. Then, I used stencil to paint the blue circles with watercolor.  




I added the sentiment " Welcome Spring ". I made some small flowers from waste snack box cardboard and colored them with markers.

 I added the tulips picture from an old newspaper. I used polypropylene ribbon to add border to the pages. I made some small butterflies and again those butterflies were made from yellow polypropylene ribbon.


 Then I just weaved the ribbon and thought of adding like a wreath.Hope it looks ok....



Linking this to

LESSology Challenge #45: Ribbon Fantasy

Materials Recycled

old directory, snack box cardboard, tulips image from old news paper

Create Something Catchy Challenges: CSCC #12 - Let's get 'Pinspired' 

I was inspired by the blue color, black color and the tile design on the floor.









Scrap Around the World: Mood Board Challenge - March 2015 Challenge 23

I was inspired by the blue color in the chevron.


Saturday, March 14, 2015

Sunshine

A simple layout to enjoy the sunshine.

The base I have used here for making this canvas is a pizza box.

I covered the entire pizza box with home made gesso.

Allowed it to dry overnight.

I added some birds which were cutout from an old newspaper. Painted the birds with watercolor.

I drew the sun with markers.

Then I added some ribbon to decorate the canvas and a flower made from a plastic milk bag.





 Homemade Gesso:

Mix 3 parts of water with 2 parts of white glue. I've used Elmer's school glue.

Add talcum powder ( I have used Jhonsons baby powder) to the glue-water mix until you get the desired consistency.

Thanks,  Joan of Art


Linking this to 

LESSology Challenge #45: Ribbon Fantasy 

 photo Challenge-45-Ribbon-Fantasy_zps4axzr6e5.jpg 

Beyond Grey Challenges : Mixed Media 

Mediums Used : Gesso, Marker  pens, Watercolors, Acrylic paints

Craft Hoarders Anonymous Challenge Blog :March Challenge - Go Green!  

Recycle Re-Purpose Re-Invent Challenge Blog : Recycle Re-Purpose Re-Invent Mar1-Mar14  

Mixed Media Monthly Challenge #10 - Birds of a Feather  







Scrap Around the World: Mood Board Challenge - March 2015 Challenge 23

I was inspired by the sunshine, the chevron, sun and the sunshine.
 

Tuesday, March 10, 2015

Paper & Crayon Batik

Inspired by Dhiyana's Paper Batik Heart, I tried batik painting  on paper.

The steps are so simple.

1. Draw the desired design on the paper and colour it  with crayons.

2. Once the colouring is finished, crumple the paper.

3. Smooth the crumpled paper.

4. Repeat this process 3 or 4 times.

5. Do the crumpling and smoothing   out carefully as the paper becomes very soft and tends to be torn apart.

6. Once the paper is smoothed out, colour the picture with watercolor.

7. The cracks created on crumpling the paper is filled with watercolors and the places where we have used the crayons, those crayons resist the watercolors.


Here is the outcome of the above said process.

 






Thank you Dhiyana for sharing this wonderful technique.

Wednesday, March 4, 2015

தடம் மாற்றிய பண்டிகை - சிறுகதை




ரூபன் &யாழ்பாவாணன் நடத்திய உலகம் தழுவிய மாபெரும் சிறுகதைப் போட்டிக்கு அனுப்பிய கதை.



காணும் பொங்கல் பண்டிகை நாளான அன்று, கடற்கரையில் கூட்டம் அலைமோதியது. மக்கள் கடல் பெரிதா, ஆழிக்கடல் பெரிதா  என்றெண்ணுமளவுக்கு காணுமிடமெங்கும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. அந்தக் கூட்டத்தினுள் சற்று நேரம் சுற்றித் திரிந்தால், தான் அன்று கொண்டு வந்திருந்த பலூன்கள் அனைத்தும் விற்று விடும். கொஞ்சமேனும் இலாபம் பார்க்கலாம் என்ற எண்ணத்தில், கடற்கரையை நோக்கி தனது சைக்கிளை வேகமாக மிதித்தான் பூபாலன்.

பூபாலன் ஒரு பலூன் வியாபாரி. பட்டப் படிப்பு முடித்திருந்தான். அவனது படிப்பிற்கேற்ற உத்யோகம் இன்னும் அவனுக்கு கிட்டவில்லை. ஆனாலும் மனம் தளராது முயன்று கொண்டிருந்தான்.  அவனது வருமானம் குடும்பத்திற்கு பயன்படுமா என்றால், பல வேளைகளில் இல்லை என்றே சொல்லலாம். அவனது தந்தை ஒரு அலுவலகத்தில் கணக்கராக பணிபுரிந்து வருகிறார். அவரது வருமானத்தில் தான் குடும்பம் நடக்கிறது. தந்தைக்கு மேலும் கஷ்டம் கொடுக்கக் கூடாது எண்றெண்ணி, கிடைக்கும் சிறு சிறு வேலைகள் செய்து வந்தான். கடந்த சில நாட்களாக, நண்பர் ஒருவரின் உதவியோடு இந்த பலூன் வியாபாரம் செய்து வந்தான்.

கடற்கரையை வந்தடைந்தான் பூபாலன். வந்ததும், பலூன்களை  ஊதி சைக்கிளில் கட்டினான். சற்று நேரத்திற்கெல்லாம், சிறுவர் கூட்டம் பூபாலனை சூழ்ந்து கொண்டது. சிறுவர்கள் விரும்பியபடி அழகழகாக பல்வேறு வடிவங்களில் பலூன்கள் ஊதிக் கொடுத்தான். ஆப்பிள் பலூன், பூ பலூன், இதய வடிவ பலூன், என்று பல்வேறு வகையான பலூன்கள் சிறார்களை பூபாலனை நோக்கி இழுத்தது.

சிறுவர்கள் ஒவ்வொருவரும் ஆளுக்கு ஒருவராய், ஒவ்வொரு வண்ணத்தில் பலூன் கேட்டனர்.

"அண்ணா ! எனக்கு பச்சை கலர்ல ஆப்பிள் பலூன் " என்றாள் ஒரு சிறுமி.

"எனக்கு சாதா பலூன் ! மஞ்சள் கலர்ல வேணும் " என்று கேட்டான் ஒரு சிறுவன்.

" சார் !  புளூ கலர்ல எனக்கு பலூன் தாங்க ! " என்றான் ஒரு சிறுவன்.

சிறார் கேட்ட வகை வகையான பலூன்களை ஊதிக் கொடுத்தான் பூபாலன்.

சிறிது நேரம் கூட்டம் இல்லாததால், ஒரு காபி குடிக்கலாம் என்று எண்ணி, காபி விற்கும் ஒருவரை அழைத்து, காபி வாங்கிக் கொண்டான். அதை குடித்துக் கொண்டிருக்கையிலேயே, இருவர் ஒரு சிறுமியை அழைத்துக் கொண்டு அவ்வழியே வந்தனர். 

பூபாலன் வைத்திருந்த பலூன்களைக் கண்டதும், அந்த சிறுமி 

"அங்கிள் ! பலூன் வேணும். " என்றபடி அங்கேயே நின்று கொண்டது.

"அப்பறம் வாங்கலாம் பாப்பா. " என்றார் உடன் வந்த ஒருவர்.

"இல்ல ! இப்பவே வேணும். " என்றது அந்த குழந்தை.

"சரி ! வாங்கிக் குடு" என்றார் மற்றொருவர்.

அவர்களும் அந்த சிறுமியை அழைத்துக் கொண்டு, பூபாலன் அருகே வந்தனர். சிறுமி, பலூன்களைக் கண்டு குதூகலித்தாள். அந்த இருவரும் பூபாலனை அவசரப் படுத்தினர். 

" சீக்கிரம் குடு பா !" என்று சொல்லிவிட்டு சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டனர். 

அவர்களது பரபரப்பைக் கண்டதும் பூபாலனுக்கு சற்று சந்தேகம் ஏற்பட்டது.

பலூன் ஒவ்வொன்றாக எடுத்து ஊதுவான். அவை சரியில்லை என்று தூக்கி எறிந்தான். சில பலூன்களை வேண்டுமென்றே உடைத்தான்.

" வேற பலூன்காரர் கிட்ட வாங்கிக்கலாம் பாப்பா ! " என்று ஒருவன் குழந்தையை அங்கிருந்து கூட்டிச் செல்ல முற்பட்டான். ஆனால், குழந்தையோ,

" எனக்கு இவர் கிட்ட இருக்குற பலூன் தான் வேணும்" என்று சொல்லி அடம் பிடித்து நின்றது.

சில நிமிடங்களில், அங்கு ஆண் பெண் இருவர் பரபரப்புடன் " பாப்பா ! பாப்பா !"
என்றபடி ஓடி வந்தனர்.

அங்கு சிறுமியைக் கண்டதும் , " பாப்பாஆஆஆ ! " என்றபடி அந்த பெண் மயக்கமுற்று விழுந்துவிட்டார்.

அவர்கள் பின்னாலேயே சில போலீசாரும் வந்து விட்டனர்.

போலீசைக் கண்டதும்,  சிறுமியுடன் வந்த இருவரும் மெல்ல கூட்டத்தில் நழுவ பார்த்தனர். அவர்களை பிடித்துக் கொண்டான் பூபாலன். பூபாலனை தாக்கி விட்டு ஓட முற்பட்டனர் இருவரும். உடனே போலீசார் அவர்களை பிடித்தனர்.

பூபாலன் அதுவரை அங்கு நடந்ததையும், அவர்கள் மீது தனக்கு ஏற்பட்ட சந்தேகத்தையும், நேரம் கடத்த முயன்றதையும் சொன்னான். அவர்கள் சிறுவர் சிறுமியரை கடத்தும் கும்பலைச் சார்ந்தவர்கள் என்றும், அவர்களை பிடிக்க உதவியமைக்கு நன்றியையும் தெரிவித்துச் சென்றனர் போலீசார்.

இதற்குள் மயக்கம் தெளிந்து எழுந்தார் அந்த பெண்மணி. தன் மகளை ஆரத் தழுவியபடி,

" என் மகளை எனக்கு பத்திரமா காப்பாத்தி குடுத்திருக்கீங்க தம்பி ! ரொம்ப நன்றி பா ! " என்று நாதழுதழுக்க கூறினார்.

"உங்களுக்கு வேண்டிய உதவிய செய்யறேன் தம்பி. என்னைய வந்து பாருங்க"
என்று உடன் வந்திருந்த ஆண் கூறிவிட்டு, தனது விலாசம், தொலைபேசி எண் அடங்கிய ஓர் அட்டையை பூபாலனிடம் கொடுத்து விட்டு, தன் விழிகளில் வழிந்த கண்ணீரை துடைத்தபடி, தன் மனைவி மகளை அழைத்துக் கொண்டு அவ்விடத்தை விட்டு சென்று விட்டார்.

சில நாட்களில், அவர் கொடுத்த விலாசத்திற்கு சென்றான் பூபாலன். அங்கு ஓர் பெரிய வர்த்தக நிறுவனம் செயல்பட்டு வந்தது.  அங்கு வாசலில் இருந்த காவலாளியிடம் அந்த அட்டையைக் காண்பித்ததும், உள்ளே அனுமதிக்கப்பட்டான் பூபாலன்.

அதன்பின், அவனது வாழ்க்கையின் தடம் நிச்சயம் மாறித்தானே போயிருக்கும். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது எவ்வளவு உண்மை !

குறிப்பு :

சிறுகதைப் போட்டியில் இக்கதைக்கு ஆறுதல் பரிசு கிட்டியுள்ளது.

சிறுகதைப்போட்டியின் வெற்றியாளர்கள்..-2015