blank'/> muhilneel: வெற்றிக்கு வழி வகுக்க என்ன வழிகள்?

Friday, April 13, 2012

வெற்றிக்கு வழி வகுக்க என்ன வழிகள்?


            உலகில் உள்ள அனைவரும் எப்பாடு பட்டாயினும் வெற்றி பெற விழைகிறோம். நாம் எந்தத் துறையில், எந்தச் செயலை செய்தாலும், அதில் நாம் முன்னோடியாய் இருக்க விழைகிறோம். அதற்காக நாம் பல்வேறு முயற்சிகள், அணுகுமுறைகள்,ஆயத்தங்கள் ஆகியவற்றை மேற்கொள்கிறோம். அங்ஙனம், நாம் மேற்கொள்ளும் அணுகுமுறைகள் மற்றும் ஆயத்தங்களில் நாம் கவனம் கொள்ளும் போது, வெற்றிக்கான வித்து இடப்படுகிறது.தெய்வப் புலவர் திருவள்ளுவர் தன் குறளில்,
             "தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
              மெய்வருத்தக் கூலி தரும்."
                           - குறள் எண் : 619
என்று குறிப்பிடுகின்றார்.எனவே வெற்றிக்கு அடிப்படையாக முயற்சியே அமைகிறது.
அணுகுமுறைகள் மற்றும் ஆயத்தங்கள்:
        நமது அணுகுமுறைகள் மற்றும் ஆயத்தங்கள் அனைத்தும் நம் எண்ணங்களில் இருந்தே ஆரம்பமாகின்றன.எனவே தான்   "உள்ளுவதெல்லாம்   உயர்வுள்ளல்"  என்கிறார் திருவள்ளுவர்.நம் எண்ணங்கள் என்றும் உயர்ந்தவையாக இருக்க வேண்டும். எண்ணங்கள் நம் உள்ளத்தில் தோன்றும் போதே, அதற்கான நடவடிக்கைகளும், செயல் முறைகளும் தானாக உருவாகி விடுகின்றன.எனவே, எண்ணங்களே முதல் படி.
           "எண்ணங்கள் செயல்களாகும், செயல்கள் பழக்கங்கள் ஆகும், பழக்கங்கள் நம் நடத்தையை நிர்ணயம் செய்யும்"
"Thoughts become Actions, Actions Create Habits, Habits build Character"
எண்ணங்கள் சிறப்பானதாக இருப்பின் செயல்களும் சிறப்பாக அமையும்.

தேர்ந்தெடுத்தல்,வாய்ப்புகள்,மாற்றங்கள்:
          இவற்றை
3 C's in Life என்று குறிப்பிடுவர். அவை, CHOICE, CHANCE, CHANGE.-You must make a choice to take the chance if you want anything to change”. நாம் வெற்றியை நோக்கி பயணிக்கும் போது, சரியான பாதையை தேர்ந்தெடுக்க வேண்டும்.நாம் தெரிவு செய்யும் பாதையில் நமக்கு கிட்டும் வாய்ப்புகளை நன்முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். "வாய்ப்புகள் ஒருமுறை தான் கதவைத் தட்டும்" என்று கூறுவர். அங்ஙனம் கிட்டும் வாய்ப்புகளை, அவை கிட்டும் நேரத்தில்  நாம் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அப்படிப் பயன்படுத்தினால் நமது வாழ்வில் நல்மாற்றங்கள் ஏற்படும்.

Confidence - நம்பிக்கை, Courage - தைரியம், Communication - தகவல்     பரிமாற்றம்:
        நம் திறமைகளை, நாம் சரியான நேரத்தில், சரியான இடத்தில் வெளிப்படுத்த வேண்டும். நம்மிடம் அளவிற்கு அதிகமான சக்தி உள்ளது. அதைச் சரியாகப் பயன்படுத்த வேண்டும். அவை
Confidence - நம்பிக்கை, Courage - தைரியம், Communication - தகவல் பரிமாற்றம். நமக்கு இருக்கும் இத் திறமைகளை நாம் சரியாக பயன்படுத்த வேண்டும்.அதற்கு நம்பிக்கையே மூலதனம். நாம் பிறரிடம் வெளிப்படுத்த விரும்பும் கருத்துக்களை தெளிவாகவும், தைரியமாகவும் கூற  வேண்டும். தன்னம்பிக்கை(Self-Confidence) மற்றும் விடாமுயற்சி மிகுந்து இருக்கும் இடத்தில், வெற்றி வாசற்க் கதவைத் தட்டும்.

நம்பிக்கை & தன்னம்பிக்கை
(Confidence & Self - Confidence):
                      நம்பிக்கையே நமது வாழ்வின் ஜீவ நாடி.நாம் வாழும் இந்த உலகில், இந்த நொடியில் என்ன நடக்கும் என்பது நமக்கு தெரியாது. ஆனாலும், நாம் ஏதோ ஒன்றின் அடிப்படையில் நமது அன்றாட வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அது தான் நம்பிக்கை.
                          " Yesterday is History; Tomorrow is mystery; Today is the Gift- That's why we call it as Present"
             நாம் செய்யும் செயல்கள், மேற்கொள்ளும் முயற்சிகள் இவையனைத்தையும் நாம் நம்பிக்கையுடன் செய்ய வேண்டும்.நம்பிக்கையே நமது வளர்ச்சிக்கும், வெற்றிக்கும் காரணமாய் அமையும்.நம் வாழ்வில் வெற்றி இலக்கை அடைவதே நம் குறிக்கோள். ஆனால் சில சமயங்களில் தோல்வியைத் தழுவ நேரிடலாம். ஆனால் தோல்விகளைக் கண்டு துவண்டு விடாது,தோல்விக்கான காரணத்தை ஆராய்ந்து,அதை சரி செய்து கொள்ள வேண்டும். தோல்வியில் தான் வெற்றியின் ரகசியமே அடங்கி இருக்கிறது. அது நமக்கு ஓர் படிப்பினையாகும். எனவே தான் " தோல்வியே வெற்றிக்கு முதல் படி"
என்று குறிப்பிடுகின்றோம். தோல்வி ஏற்பட்டாலும், முயற்சியைக் கைவிடாது தன்னம்பிக்கையுடன் உழைத்தால் நம் லட்சியத்தில் நமக்குவெற்றி கிட்டும்.
              "எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது; எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது;எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும்"
இதுவே கீதையின் சாரம்.
திட்டமிடல்(Planning):
        ஒரு செயலை நாம் செய்யத் தொடங்கும் முன், அதற்கான திட்டத்தை நாம் வகுக்க வேண்டும். திட்டம் என்பது செயலின் ஒரு பகுதி. திட்டமிடல் என்பது வெற்றிக்கான ஒரு வழிகாட்டி. எதிர்பாரா சவால்களை சந்திக்க நாமே நம்மை தயார்படுத்திக் கொள்ள திட்டமிடல் துணைப்புரியும். நம் உள்ளத்துக் கனவுகளை நனவாக்குவதற்கான ஒரு புதிய தொடக்கம். திட்டமிடல் மூலம் உழைப்பு வீணாவது தவிர்க்கப்படும். முயற்சிக்கு உண்டான அதிகபட்ச பலன் கிடைக்கும். பேரிட்டோ என்ற அறிஞரின் கருத்துப்படி திட்டமிட்டு செய்யும் செயலில் 20% உழைப்பில் 80% காரியம் முடிந்து விடும். செயல் சிறியதானாலும், பெரியதானாலும் அதற்கேற்ப ஒரு திட்டம் கட்டாயத் தேவை.  திட்டம் தீட்டி வேலை செய்யும் பொழுது நமது செயல் விரைவாகவும் சிறப்பாகவும் அமைகிறது. ஒரு  திட்டமானது, நாம் தற்போது இருக்கும் நிலையிலிருந்து ஆரம்பித்து, நாம் அடைய வேண்டிய இலக்கினை நோக்கி இட்டுச் செல்லும். முதலில் குறிக்கோளை மனதில் கொள்ள வேண்டும். அதன் பின் அந்த குறிக்கோளிற்கு ஏற்றவாறு திட்டம் தீட்ட வேண்டும்.நாம் தீட்டும் திட்டங்களிற்கு கால வரையறை நிர்ணயம் செய்ய வேண்டும்.அங்ஙனம் நிர்ணயம் செய்தால் தான் நம்முள் ஓர் உந்துதல் ஏற்படும். நிர்ணயம் செய்யப்பட்ட காலவரையரைக்குள் தீட்டிய திட்டத்தை செயலாற்றிட வேண்டும். கால வரையரையில்லாத திட்டங்கள் வெறும் கற்பனைகளாய் கரைந்து விடும்.செயல்வடிவம் பெறாத திட்டங்கள் பயனற்று விடும்.எனவே, திட்டமிட்டவுடன் செயலில் இறங்க வேண்டும். வரையறுக்கப்பட்ட தெளிவான திட்டம் வெற்றிக்கு வழி வகுக்கும். ஒருகால், தோல்வியே சந்திக்க நேரிடினும் அது தற்காலிகமானதாகத்தான் இருக்கும். அவை நமக்கு   நல்ல அனுபவங்களாக, படிப்பினைகளாக அமைந்து நமக்கு வெற்றியைத் தேடித்தரும்.
உழைப்பு(HardWork):
              "ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
  தாழாது உஞற்று பவர்"   
                                            - குறள் எண் : 620
      ஒரு செயலில் வெற்றி பெற வேண்டுமெனில் தன்னம்பிக்கையுடன் கூடிய திட்டமிட்ட உழைப்பு மிகவும் அவசியம். தளராத முயற்சியும், உழைப்பும் ஒரு மனிதனிடத்தில் இருந்தால் அவனுக்கு வெற்றி நிச்சயம் கிட்டும்.நமது உழைப்பு எப்படிப்பட்டதாய் இருந்தால் நமக்கு வெற்றி கிடைக்கும் என்று சிந்தித்து செயல் பட வேண்டும்.நாம் என்ன செய்கிறோம், அதை ஏன் செய்கிறோம், அதைச் செய்வதால் நமக்கு என்ன பலன், அதற்கு போதுமான உழைப்பை நாம் மேற்கொள்ளுகிறோமா என்பதை சிந்தித்து செயலாற்ற வேண்டும்.நம்மை விட உயர்ந்தவர்களின் செயல்புரியும் விதம், சிறப்பானதாக இருப்பின் அதை பின்பற்ற தயங்கக் கூடாது. வெற்றி பெற்றவர்களின் அறிவுரையை பெறவும் மறக்கக் கூடாது.  செய்யும் செயலில் ஈடுபாடும், முழுக் கவனமும் இருக்க வேண்டும்.
              ஈடுபாடு சிறிதுமின்றி,கட்டாயத்தின் பேரால் மேற்கொள்ளும் உழைப்பினால் வெற்றி கிட்டுவதில்லை.எந்தச் செயலைச் செய்தாலும் அதில் முழு மனதாய் ஈடுபாட்டுடன் செய்ய வேண்டும்.அங்ஙனம் செய்யும் பட்சத்தில், நமக்கு வெற்றி நிச்சயம் கிட்டும்.
          “ வெற்றி வேண்டுமா... போட்டுப் பாரடா எதிர் நீச்சல்...”
இதை மனதில் கொண்டு உழைப்போம்....வெற்றி மலர்களை மாலைகளாய் சூடுவோம்.


No comments:

Post a Comment