blank'/> muhilneel: July 2014

Wednesday, July 30, 2014

Hand-made Rakhi



A Simple hand made rakhi done with woolen yarn.

The Centre piece is made with Cantaloupe / Musk melon seeds and bead.


Linking this to Artsy Craftsy July 2014 Challenge - Rakhi Special

A simple wall hanging









I made this wall hanging with empty cereal box.

The birds, branches and leaves were cut out from the cereal box and arranged together.


Linking this to  Try it on Tuesday : Things with Wings

Monday, July 28, 2014

Sunday, July 27, 2014

Business Card holder





This Card Holder was hand-sewn from  rice bag which come in different colors.

I have used the rice bag scrap for the inner layer and the felt for the outer  layer.

The button and the elastic which holds the button were from some of my old dresses.

The  felt flower which I have used here is from one of my old craft work.

Linking this to  LESSology Challenge #38: Sew lovely

Home - The School of Human Virtues

A try on a Simple home shaped card






Linking this to Beyond Grey Challenges: BGC#55 -Welcome HOME

Home is where the heart is....





Home interprets heaven. Home is heaven for beginners.
Charles Henry Parkhurst


I made this home with a cereal box. 

Decorated it with some paper strips, Paper roses, woolen yarn, thermocol,  blings from my old dress.


Saturday, July 26, 2014

அழகு

இரண்டு நாட்களாகவே பொன்மதியின் முகத்தில் சந்தோஷம், வெட்கம் கலந்த பூரிப்பு  நிழலாடியது. வழக்கத்தை விட சற்று அதிகமாகவே மஞ்சள் பூசிய முகம்  பளபளத்தது. பொன்மதியின் இந்த திடீர் பூரிப்பிற்கும், பளபளப்பிற்கும் காரணம், அந்த வாரக் கடைசியில், பொன்மதியை பெண் பார்க்க, மாப்பிள்ளை வீட்டார் வர இருக்கிறார்கள்.

 பொன்மதி - காட்சிக்கு எளிமையானவள், மன உறுதி மிகக் கொண்டவள், எவரிடமும் கலகலப்பாய் பழகும் சுபாவம் கொண்டவள். நிறம் சற்று கருப்பென்றாலும், களையான முகம் கொண்டவள். உள்ளமோ, கள்ளம் கபடமறியா தூய்மையான பாலின் நிறத்தை ஒத்தது. கல்லூரிப் படிப்பை அந்த ஆண்டு தான் முடித்திருந்தாள்.

ஒரு நாளும் பொன்மதிக்கு, தன் கருப்பு நிறம் ஓர் பெரும் குறையாகவே தோன்றியதில்லை. " நிறமோ, உருவமோ ஒருவருக்கு உயர்வையும் உன்னதத்தையும் தருவதில்லை. மனதில் தோன்றும் எண்ணங்களே மனிதனை உயர்த்தவோ, தாழ்த்தவோ செய்கின்றன " என்ற உயரிய கருத்தை அவளது உள்ளத்தில் ஆழப் பதித்து வளர்த்திருந்தனர் அவளது பெற்றோர்.

எவரிடமும் கயமை பாராட்டாது, முடிந்தவரை பிறருக்கு தன்னாலான உதவிகளை செய்து , அனைவரிடமும் அன்பு பாராட்டி வந்தாள் பொன்மதி. எவரிடமும் சற்றும் அதிர்ந்து பேச மாட்டாள். கோபம் கொள்ள மாட்டாள். தன்னைப் பற்றி எவரேனும் அவதூறு பேசினாலோ, கிண்டல் கேலி செய்து பேசினாலோ, அதைக் கண்டு கோபம் கொள்ளாது அமைதியாக சென்று இருந்து விடுவாள்.

" உன்  காதுபடவே  உன்னை  இவ்வளவு கிண்டல் பண்றாங்களே, நீ எப்படி இதையெல்லாம் கேட்டுட்டு பொறுமையா இருக்க ? " என்று கேட்கும் தோழிகளுக்கு,

" போகட்டும் விடு. இப்போ, அவங்க வாய்க்கு நான் அவலா இருக்கேன். நாளைக்கு  பேச புதுசா கிடைச்சதும், நான் அவங்களுக்கு நமநமத்துப் போயிடுவேன். கொஞ்ச நாள் தானே. இது மூலமா அவங்களுக்கு ஏதோ சந்தோஷம், அனுபவிச்சிட்டுப் போகட்டும் விடு " என்று சமாதானம் சொல்வாள்.

தன்னைப் பெண் பார்க்க வரப் போகிறவர் எப்படி இருப்பாரோ என்று எண்ணிக் கொண்டிருக்கையில், அவளது தந்தை நாகராஜன், 

" மாப்பிள்ளை வீட்டிலிருந்து வர்ற வெள்ளிக்கிழமை உன்னை பெண் பார்க்க வருகிறார்கள் அம்மா " என்ற தந்தைக்கு, நாணம் கலந்த புன்னகையை பதிலாக உதிர்த்து விட்டு அவ்விடத்தை விட்டு அகன்றாள் பொன்மதி.

வெள்ளிக் கிழமையும் வந்தது. பொன்மதிக்கு ஒருபுறம் மகிழ்ச்சி, ஒருபுறம் படபடப்பு என்று இனம் புரியாத உணர்வலைகள் மனதுள் அலைமோதின. மாலையில் நல்ல நேரம் எப்போதென்று பார்த்து அப்போது கோயிலுக்கு செல்வதாக ஏற்பாடாகி இருந்தது. மாப்பிள்ளை வீட்டாரும் கோயிலுக்கு வந்து விடுவதாக சொல்லியிருந்தார்கள்.

மாலையில் தனது பெற்றோர் மற்றும் சில நெருங்கிய உறவுகளுடன் கோயிலுக்குச் சென்றனர். அங்கு மாப்பிள்ளை வீட்டார் ஏற்கனவே வந்து காத்திருந்தனர். பொன்மதியை தூரத்திலிருந்து பார்த்தவர்கள், என்ன நினைத்தார்களோ, என்னவோ, சட்டென்று தாங்கள் வந்திருந்த காரிலேறி சென்று விட்டனர். என்ன ஏதென்று காரணம் புரியாது பெண் வீட்டார் தவித்தனர்.

ஓரிரு நாட்களுக்குப் பின், பெண் பார்க்க ஏற்பாடு செய்திருந்த நாகராஜன்  அவர்களின் மாமா வந்த போது  சொன்ன பின்னர் தான் அவர்கள் பொன்மதி கருப்பு நிறமாக இருக்கிறாளென்றும், அதனால் பெண்ணைப் பிடிக்கவில்லை என்றும் சொல்லி  இருக்கிறார்கள் என்பதும் தெரிய வந்தது.

பொன்மதியின் பெற்றோருக்கு மனம் என்னவோ போலிருந்தது.  தங்கள் மகள் வருத்தப் படுவாளே என்று எண்ணி மிகவும் வருத்தப்பட்டனர். இரண்டு நாட்களாக வீட்டில் அனைவரிடையேயும் ஒரு வித அமைதி நிலவியது.  அனைவரும் மௌனத்தையே துணையாக்கிக் கொள்ள, அனைவரது மௌன தவத்தையும் கலைப்பவளாய் பொன்மதி பேச ஆரம்பித்தாள்.

" அம்மா ! அப்பா ! எதுக்கு இப்போ வருத்தப்படுறீங்க ? பலதரப்பட்ட மனிதர்கள், அவர்களோட எண்ணங்கள், குணாதிசயங்கள், எதிர்பார்ப்புகள் இப்படி பல விஷயங்களை தெரிஞ்சிக்க கிடைத்த ஒரு வாய்ப்பா இதை எடுத்துக்குவோமே. நிறத்தை வெச்சு ஒருத்தரை எடை போடும் இத்தகைய மனிதர்களுடன், நாளை என்னோட வாழ்வு அமைஞ்சிருந்தா எப்படி இருக்கும்னு யோசிச்சு பாருங்க. " நடப்பதெல்லாம் நன்மைக்கே " அப்படின்னு எடுத்துப்போம் " என்றாள் பொன்மதி.

ஓர் பெருத்த ஏக்கப் பெருமூச்சு மட்டுமே பெற்றோரிடமிருந்து பொன்மதிக்கு பதிலாக கிடைத்தது.

மீண்டும் பொன்மதியே தொடர்ந்தாள். முடி கருப்பா இருந்தால் தான் அழகு. நம் பார்வைக்கு கண்ணின் கருவிழி தான் ஆதாரம். அதில் வெள்ளை விழுந்தால் கண் புரை என்று சொல்கிறோம்.தோலில் திட்டு திட்டாக பளீரென்று வெள்ளை நிறமாக மாறினால், வெள்ளையாகி விட்டோம், வெள்ளை தான் அழகு என்றெண்ணி விட்டு விடலாமே ? அதை ஏன் வெண்குஷ்டம் அப்படின்னு சொல்லி டாக்டர் கிட்ட ஓடணும் ?

கருப்பு தான் அனைத்து நிறங்களுக்கும் அடிப்படை. எல்லா நிறங்களும் கருப்புக்குள்ள அடங்கிடும்.எனக்கு நல்லா சிவப்பா அல்லது மாநிறமா கூட மாப்பிள்ளை வேண்டாம். நல்ல கருப்பான மாப்பிள்ளையே பாருங்கப்பா. வெளித்தோற்றம் கருப்பா இருந்தாலென்ன ? உள்ளம் மாசு மரு இல்லாம வெள்ளையா இருந்தாலே போதும். அது தான் உண்மையான அழகு.

மனதில் தோன்றிய எண்ணங்களை எல்லாம் பொலபொலவென மழை சுமந்த கார்மேகம் போல கொட்டித் தீர்த்துவிட்டு, இலேசான மனதுடன் தனது அறை நோக்கி சென்றாள். அவளுக்கான இராஜகுமாரன் இனிமேலா பிறந்து வரப்போகிறான்? எங்கோ பிறந்து வளர்ந்து இருப்பான். விரைவில், இந்த இராஜகுமாரியை தேடி வருவான்.

Wednesday, July 23, 2014

Altered Bottle



This  is an altered art made with a Dish wash liquid bottle. The bottle was covered with tissue paper and painted with water color which gave a wrinkled effect.

Then the bottle was decorated with scraps of cloth, buttons, felt, gold foil, ribbon.

The buttons were from some old dresses.
The small butterfly in the centre was made with cloth scrap.
The roses were hand - sewn with old cloth scraps.
A small bow was made with felt.



Linking this to 


LESSology Challenge #38: Sew lovely

Artistic Inspirations : Challenge #101 Buttons / Anything Goes

Mixed Media Monthly Challenge #2 - Around the House




Won a Random prize for this work from The Mixed Media Monthly Challenge Blog.


Thanks a lot for the Wonderful stuff.


Tuesday, July 22, 2014

Pen Holder / Utility holder using Recycled Magazines

I made this pen holder using recycled magazines. The magazine pages ate rolled up and pasted to an empty  salt  container.

The container like this was transformed into  a pen holder using old magazines.

This image was downloaded from      http://www.desimad.com/js/morton-salt-container





Sending this to  
Lulupu Challenge # 35  Go 3D
Anything but a Card : Anything goes Challenge no. 37 
Funky Polkadot Giraffe : Too Cute Tuesday
 

Sunday, July 20, 2014

Yo Yo Christmas Tree




I have made the Yo-Yo's out of  fabric from old dresses.
The small bow was made using a waste felt scrap.
The buttons are from old shirt.
The small gold - like flower on the felt was made using the gold foil from Ferrero Rocher chocolate.

Linking this to
 LESSology Challenge #38: Sew lovely
 Pretty Paper Studio UAE August Challenge : Sew lovely

Wednesday, July 16, 2014

Recycled Gift bag



I made this small gift bag out of a waste rice bag.

The flowers were also made using the rice bag scraps.

Used a waste button for the centre of the flower.

The string of beads was from one of my dresses.



Linking this to LESSology Challenge #38: Sew lovely
Linking this to ANYTHING Goes Challenges No. 37

Monday, July 14, 2014

Bow and Arrow

 


Made this Bow and Arrow with a Popsicle stick, elastic and an ear bud.

Wet the popsicle stick and fold it like an arch.

Take an elastic and tie the ends into loop.

Make sure it holds the popsicle stick tightly.

Use the ear bud  as an arrow.

Decorate the popsicle stick.

Now the bow and arrow is done.

Pop up Birthday Card

This is my first attempt on making a Pop - Up Card.




Linking this to
Let's get kiddish - Beyond Grey challenges
Pop-Up Cards - Create Something Catchy




Dragonfly - Recycled Craft

I made this Dragon fly with waste plastic spoon and Plastic milk jug.



Linking this to Beyond Grey Challenges :BGC#54 - Lets get Kiddish

Thursday, July 3, 2014

விருது

நேரம் ஆக ஆக கண்மணிக்கு மனதுள் சற்று கலக்கம் ஏற்பட்டது. துணைக்கு வந்திருந்த தோழி  தங்கமீனாவோ, நிலைகொள்ளாது தவித்துக் கொண்டிருந்தாள். இருவருக்கும் என்ன செய்வதென்றே புரியவில்லை.

" இவ்வளவு நேரம் ஆகும்னு தெரிஞ்சிருந்தா, நான் வந்திருக்கவே மாட்டேன் "  என்று  பதைபதைப்புடன் சற்று காட்டமாகவே பொரிந்தாள் தங்கமீனா.

" நானும் இதை எதிர்பார்க்கலையே. இப்போ என்ன பண்றதுனே  புரியலையே " என்றாள் கண்மணி, தங்கமீனாவின் பதட்டம் தன்னுள்ளும் பற்றிக் கொண்டவளாக.

" நான் எட்டு மணிக்குள்ள ஹாஸ்டலுக்குப் போகலைன்னா, லேட்டா வந்ததுக்காக  ஃபைன் போட்டுடுவாங்க. நான் உடனே ஹாஸ்டலுக்குப் போயாகனும். எனக்கு இந்த ஊர் வேற புதுசு. என்ன பண்றதுன்னே புரியல. ரொம்ப பயமா இருக்கு. நான் உடனே கிளம்பறேன்." என்று முகத்தில் கலவரம் சூழ்ந்தவளாய் சொன்னாள் தங்கமீனா.


அந்த இக்கட்டான சூழ்நிலையில் என்ன செய்வதென்று புரியாமல், " சரி மீனா, நீ வேணுமானால் கிளம்பிப் போ. நான் இருந்து விழா முடிஞ்சதும் வரேன் " என்றாள் கண்மணி.


கண்மணிக்கு விவேகானந்தர் அறக்கட்டளையின் சார்பில் "இளம் கவி" விருது வழங்கப்படுவதாய் இருந்தது.கவிஞருக்கான விருதினை பெறுகிறாள் என்று, கண்மணியை ஏதோ பெரிய கவிஞர் என்று எண்ணி விட வேண்டாம். மனதில் பிரவாகமெடுத்து ஓடும் அரூபமான எண்ண அலைகட்கு தனக்குத் தெரிந்த வார்த்தைகளினால் ரூபம் கொடுக்கிறாள். அவ்வளவே ! கலந்து கொள்ளும் அனைத்து கவிதைப் போட்டிகளிலும் வெற்றி வாகை சூடினவளில்லை.ஆனாலும், எழுதுவதை அவள் கைவிடவில்லை.


ஒருமுறை நாளிதழில், இளம் படைப்பாளர்கள், அவர்கள் கல்வி, இசை, ஓவியம், நடனம் என்று  எத்துறையில் சிறந்து விளங்கினாலும்,அதற்குத் தக்க சான்றுகள்   அளித்தால், பரிசீலனைக்குப் பின் அவர்களுக்கு விருது வழங்கப்பட்டது.  அப்படித் தான், கண்மணிக்கும் அவ்விருது கிடைத்தது.


அந்த விருதினை வாங்கத் தான், கண்மணி தன் தோழி தங்கமீனாவுடன் வந்திருந்தாள். கண்மணிக்கு அவ்விருதை தனது பெற்றோருடன் வந்து வாங்க வேண்டுமென்று பேராவல். ஆனால், ஆசிரியை ஆக பணிபுரியும் கண்மணியின் தாயாருக்கோ, அன்று முக்கியமான  கூட்டம். அவளது தந்தையோ, அவரது வியாபார விஷயமாக வெளியூர் சென்றிருந்தார். தனியாக விழாவிற்கு வந்து செல்வதற்கு தயங்கிய கண்மணியுடன், தங்கமீனா உடன் வருவதாகக் கூற, தைரியமாகப் புறப்பட்டு வந்து விட்டாள் கண்மணி.


ஆறு மணிக்கு விழா ஆரம்பித்தது. விழாவின் முக்கியப் பிரமுகர்கள் அனைவரும் உரையாற்றி முடித்து, விருதுகள்  ஆரம்பிக்கவே மணி  ஏழரை ஆகிவிடும் போல் தோன்றியதால், அதற்கு மேல் அதிக நேரம் அங்கிருந்தால், தங்கமீனா விடுதிக்கு செல்ல மிகவும் தாமதமாகி விடும். ஆதலால், அவளை விடுதிக்கு அனுப்பிவிட்டு, தன்  தாயை வீட்டிலிருந்து கிளம்பி வரச் சொல்ல எண்ணி, வீட்டிற்கு தொலைபேசியில் அழைத்து, தன் தாயிடம் விஷயத்தை கூறினாள் கண்மணி. அவரோ,உடனே கிளம்ப முடியாது என்றும், சற்று நேரத்தில் உடன் படிக்கும் நண்பனது வீட்டிற்கு சென்ற கண்மணியின் தம்பி வந்ததும் கிளம்பி வருவதாக சொன்னார்.


" தங்கமீனா, எங்க அம்மா  கிளம்பி வரேன்னு சொல்லியிருக்காங்க. நான் உன்னை நகரப் பேருந்தில் (டவுன் பஸ்) ஏற்றி விடுகிறேன் , பேருந்து காலேஜ்  அருகில் உள்ள நிறுத்தத்திற்கே செல்லும் , நீ  ஹாஸ்டலுக்கு  குறித்த நேரத்திற்கு சென்று விடலாம் " என்று சொன்னாள்  கண்மணி.


தங்கமீனாவோ, " எனக்கு இந்த ஊர் புதிது. இந்த இடமும் புதிது. எனக்கு நம்ம காலேஜும் , பக்கத்தில் இருக்கும் சில இடங்களுக்கு செல்லவும் மட்டுமே தெரியும். வேறு எதுவுமே இந்த ஊரில் தெரியாது. நான் உடனடியா போய்  ஆகணும். இல்லைன்னா,  என்னைய ஹாஸ்டல்ல இருந்து வெளிய அனுப்பிருவாங்க." என்று அழ ஆரம்பித்து விட்டாள்.


என்ன செய்வதென்று புரியாமல், தவித்த கண்மணி, விழாக் கமிட்டியினரிடம் சென்று, நிலைமையை எடுத்துரைத்தாள். உடனடியாக விருதினை வழங்க ஏதேனும் வழி உள்ளதா, அல்லது அஞ்சலில் பெற்றுக் கொள்ள முடியுமா என்று கேட்க, அவர்கள் உடனடியாக வழங்க வழிவகை செய்வதாக சொல்லிச் சென்ற சில நிமிடங்களிலேயே, சிறப்பு விருந்தினர்களின் உரை அனைத்தும் முடிந்தது. விருது வழங்க ஆரம்பித்ததும், முதலாவதாக கண்மணியை அழைத்து விருதினை வழங்கினர்.


விருதினை பெற்றுக் கொண்டதும், அங்கிருந்து சிட்டெனக் கிளம்பி விட்டனர் தங்கமீனாவும் கண்மணியும். ஓர் ஆட்டோவைப் பிடித்துக் கொண்டு கிளம்பினார்கள் இருவரும். தங்கமீனாவை கல்லூரி விடுதியில் விட்டுவிட்டு, வீட்டிற்கு செல்ல எண்ணினாள் கண்மணி. பொதுவாக நண்பர்களது வீட்டிற்கு சென்றால், மிகவும் தாமதமாகவே வருவான் கண்மணியின் சகோதரன். அதை மனதில் எண்ணிப் பார்த்தவள், தனது தாய் எப்படியும் கிளம்ப தாமதம் ஆகும். ஆட்டோவில் செல்வதால் விரைவாக  சென்று விடலாம். எப்படியும் வழியிலேயே தனது தாயைக் கண்டு, அவரை நிறுத்தி அவருடனேயே வீட்டிற்கு சென்று விடலாம் என்றெண்ணிய கண்மணிக்கு மிகப் பெரிய ஏமாற்றம்.


கல்லூரியில் மாணவர்கள் கைபேசி பயன்படுத்தக் கூடாது என்று மிகக் கடுமையான சட்டம் இருந்ததால், கண்மணியிடம் கைபேசியும் இல்லை. அதனால், அவளால் தனது தாயை தொடர்பு கொள்ளவும் இயலவில்லை. கண்மணி வீட்டிற்கு செல்லும் முன்னமே, அவளது தாயார் விழா நடக்கும் இடத்திற்கு சென்று விட்டிருந்தார். அங்கு சென்று கண்மணியைப் பற்றி விசாரிக்க, அவர்களோ, கண்மணி விருதினை அவசர அவசரமாகப் கேட்டுப் பெற்றுக் கொண்டு சென்று விட்டதாய்ச் சொல்ல, அந்தத் தாயின் மனம் பயத்தில் மிகவும் பதைபதைத்தது. மகளுக்கு என்னாயிற்றோ, எங்கு சென்றாளோ, அவசரமாகப் புறப்பட்டு வரச் சொன்னாளே, இங்கு காணவில்லையே, எங்கு சென்றாளோ, என்ன செய்வது என்று மனம் நடுங்கியது.


அருகிலிருக்கும் பேருந்து நிறுத்தங்கள், ஆட்டோ நிற்கும் இடங்களில் தன் மகள் இருக்கிறாளா என்று பார்த்தபடியே வந்தார். ஆனால், அங்கு எங்கும் கண்மணி இல்லாதது, அந்தத் தாய்க்கு கலக்கத்தையே ஏற்படுத்தியது. மனதில் குழப்பமும், கவலையும் ஒருசேர, என்ன செய்வதென்று புரியவில்லை. எனவே பயத்துடனும் படபடப்புடனும், மீண்டும் பேருந்திலேறி வீட்டிற்குச் செல்ல முடிவெடுத்தார்.


வீட்டிற்கு முன்னமே வந்து சேர்ந்துவிட்ட கண்மணிக்கோ, வீட்டில் இருப்பு கொள்ளவில்லை. அவளிடம் வீட்டுச் சாவியும் இல்லை. வாசலில் அமர்ந்து கொண்டாள். பூட்டியிருந்த வீட்டினுள் தொலைபேசி பத்து நிமிட இடைவெளியில் அடித்து அடித்து ஓய்ந்தது. தனது தந்தை தான் தொலைபேசியில் அழைக்கிறார் என்பது கண்மணிக்கு தெரியும். தந்தையிடம் நன்றாக திட்டு வாங்கப் போகிறாள் என்பது நன்றாகவே தெரிந்தது. மனம் எங்கும் பயம் பேயென  அப்பிக் கொண்டது. வீட்டிலிருந்து பேருந்து நிறுத்தத்திற்கும், பேருந்து நிறுத்தத்திலிருந்து வீட்டிற்கும் என நிலை கொள்ளது தவிப்புடன் ஓடிக் கொண்டிருந்தாள் கண்மணி.



வீட்டைத்  தாண்டி வாகன நெரிசல் மிகுந்த சாலையில் வருவதும் போவதுமாய் இருக்க, கண்மணிக்கு என்னவோ போலிருந்தது. ஒன்பது மணியை வேறு நெருங்கி விட்டதால், சாலையில் தனியாக சென்று வந்து கொண்டிருந்தவளுக்கு பயம் வேறு விடாப்பிடியாய் துணையாகிப் போனது. தூரத்தில், தன் தாய் வருவதைக் கண்டதும், ஏனோ கண்மணிக்கு மகிழ்ச்சிக்கு பதிலாய், அடிவயிற்றிலிருந்து விம்மலாய் அழுகை பீறிட்டுக் கிளம்பியது. வேகமாக ஓடி  வந்து, தன் தாயின் கரங்களைப் பற்றிக் கொண்டவள், ஓவென அழுது தீர்த்தாள்.



மிகுந்த அலைச்சலும், மகளைக் காணவில்லையே என்ற பரிதவிப்பினால் உண்டான  மன உளைச்சலும் அந்தத் தாய்க்கு ஆத்திரத்தினை ஏற்படுத்தியிருந்தன. வீட்டிற்கு வந்து சேர்ந்த  சில மணி நேரங்கள், அந்த இல்லத்தில் மயான அமைதியிலேயே கடந்தன. சிறிது நேரத்திற்குப் பின், தாயே அமைதியைக் கலைத்தார். மகளை உணவருந்த அழைத்து, தாயும் பிள்ளைகளும் ஒன்றாக இரவு உணவருந்தினர்.



கண்மணி  தனக்கு நேர்ந்த இக்கட்டான சூழலை தாயிடம் விளக்கிக் கூறினாள். பேசப் பேச, வார்த்தைகள் எல்லாம் தொண்டைக் குழியின் அடியாழத்திலேயே சிக்கிக் கொண்டு விட, அவளுக்கு கண்ணீரே வார்த்தைகளானது. தன் மகளின் கண்ணீரைக் காணப் பொறுக்காத தாய், கண்மணியை ஆரத் தழுவிக் கொண்டார். அந்தத்  தழுவலே கண்மணிக்கு ஆயிரமாயிரம் விருதுகளைப் பெற்ற மனமகிழ்வையும் பேரானந்தத்தையும் ஏற்படுத்தியது.