blank'/> muhilneel: புதிர்

Thursday, February 23, 2012

புதிர்

1) காலே அரைக்கால் காசுக்கு
நாலே அரைக்கால் வாழைக்காய்
காசுக்கு எத்தனை வாழைக்காய்?


முதல் வரி: 1 / 4 + 1 / 8 = 3 / 8 
இரண்டாம் வரி: 4 + 1 / 8 = 33 / 8 
மூன்றாம் வரி: 3 / 8  காசுக்கு 33 / 8  வாழைக்காய் எனில் ஒரு காசுக்கு 11 வாழைக்காய்.

2 ) எண்ணஞ்சு கால் சிரசினை
     இருபதொருமா சிரசன் 
     கொல்லுகிறேன் நானென்றான் - ஏன்?
     ஏனென்றால் 
     ச எழுத்து நாலதையும்
     த எழுத்து ஒன்பததையும் 
     தூக்கிச்  சென்றதால்.


     எண்ணஞ்சு கால்: 8 x 5 x 1 /4 =10 தலை இராவணன்
இருபத்தொரு மா : 20 x 1 / 20 = 1 தலை இராமன் (ஒரு மா=1 / 20 )
ச எழுத்து நாலு  சீ  (ச,சா,சி, சீ )
த எழுத்து ஒன்பது தை (த,தா,தி,தீ,து,தூ,தெ,தே,தை)

ஒரு தென்னந்தோப்புல ஏழு வேலிகள் இருந்துச்சு. ஒவ்வொரு வேலிக்கும் ஒருத்தன்னு மொத்தம் ஏழு காவல்காரங்க. அப்ப, அந்தத் தென்னந்தோப்புல ஒரு திருடன் திருடப் போறான். இந்த காவக்காரங்களும் திருடங்க. அவங்க எல்லாருமே ஒன்னு சொன்னா மாதிரி திருடங்கட்ட சொல்லுறாங்க, "நீ எடுத்துட்டு வர்ற தேங்காயில பாதி எனக்குத் தரணும்"னு. அவனும் ஒத்துக்கறான். அப்படி அவன் ஒவ்வொருத்தருக்கும் இருக்குறதுல பாதியா ஒவ்வொரு வேலியிலயும் குடுத்துட்டு வெளில வரும்போது, கையில ஒரே ஒரு தேங்காய் இருக்குது. அப்ப, அவன் மொத்தமாப் பறிச்ச தேங்காய்க எவ்வளவு?





http://varalaaru.com/Default.asp?articleid=768 
     

No comments:

Post a Comment