blank'/> muhilneel: கதை - 5

Monday, December 26, 2011

கதை - 5

இலக்கம்: 6


இராஜா கம்யூட்டரை ஷட்டவுன் செய்த போது மணி சரியாக மாலை ஏழு மணி. இப்பொழுது அலுவலத்திலிருந்து கிளம்பினால் சரியாக இருக்கும் என நினைத்து , ராஜாவின் கார் நகரின் மூன்று நட்ச்சதிர ஹோட்டலை நோக்கி பயணித்தது . அந்த ஹோட்டலின் அடர்த்தியான குளிர்யூட்டபட்ட பாரில் நுழைந்தபோது , வாழ்வில் யாரை பார்க்க கூடாது என்று நினைத்துயிருந்தரோ ,அவன் அங்கு அமர்ந்துயிருப்பதை பார்த்து வெறுப்புடன் வெளியேறியபோது ,என்ன ராஜா என்னை இங்கு வர சொல்லிவிட்டு நீ எங்கே கிளம்புர குரல் கேட்டு திரும்பியவர் , பேசாமல் என் கூட வா ,நாம் வேற இடம் போகலாம் . என்னவாயிருக்கு இவருக்கு என்று ராஜாவை பின் தொடர்ந்தார் அவரின் நண்பர் குழப்பமாக ..
       வேகமாகச்  சென்று காரின் கதவைத் திறந்து, அமர்ந்து கொண்டு தன்
நண்பர் ரவியை  அமரச் சொன்ன ராஜா, சில நிமிடங்கள் படபடப்பாகவே காணப்பட்டார்.அவரது இந்த திடீர் படபடப்பிற்கு காரணம் புரியாது, என்ன செய்வதென்று அறியாது ரவி அவரைப் பார்த்தபடி, அருகில் அமர்ந்திருந்தார்.கால் மணி நேரத்திற்குப் பின்,ராஜா காரை கிளப்பிக் கொண்டு அந்த நெரிசல் மிகுந்த நெடுஞ்சாலைக்குள் புகுந்தார்.  அங்கிருந்து கிளம்பியதிலிருந்து இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை.கார் கடற்கரையினை அடைந்தது. காரை ஒரு ஓரமாய் நிறுத்திவிட்டு,இருவரும் கடற்கரையினை நோக்கி நடந்தனர்.கடற்கரை மணலில் இருவரும் அமர்ந்தனர். 
           நீண்ட மௌனத்தை கலைக்கும் வகையில் ரவி, " என்ன ராஜா, என்னாச்சு??" என்று கேட்டார்."நான் யாரை என் வாழ்நாளில் பார்க்கக் கூடாது என்றிருந்தேனோ, அவனை அங்கு பார்த்தேன்.அதனால் தான் வேகமாக அங்கிருந்து வந்துவிட்டேன்" என்றான்."என்ன சொல்கிறாய் நீ? எனக்கு ஒன்றும் புரியவில்லையே..." என்றான் ரவி.ஒரு நீண்ட பெருமூச்சிற்குப் பின், ராஜா பேச ஆரம்பித்தான்."நான் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருக்கும் போது, என்னுடன் பயின்றவன் தான் அவன்.வரிசை எண்களில் எனக்கு முன் வருபவன்.தேர்வறையில், எப்போதும் அவனுக்குப் பின் நான் தான் அமர்ந்திருப்பேன். பட்டப்படிப்பின் இறுதித் தேர்வுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயம். அப்போது அவன்,தான் சரியாகப் படிக்கவில்லை என்றும், அவனுக்கு விடைகளைக் காண்பிக்கும்படியும் கூறினான். நான் அவனிடம் எதுவும் பேசாமல் தேர்வெழுதுவதிலேயே கவனமாக இருந்தேன்.அவனும் என்னை காண்பிக்கும்படி தொந்தரவு செய்து கொண்டிருந்தான்.அவன் ஏதோ துண்டுக் காகிதத்தை என் அருகில் வீசினான். நான் ஆத்திரப்பட்டு திரும்ப, அப்போது அங்கு வந்த பறக்கும் படையினரால் நான் அவனிடம் பேசியதாக பிடிக்கப்பட்டு,என்னால் 3 வருட காலத்திற்கு தேர்வுகள்  எதுவும் எழுத முடியாத நிலை ஏற்பட்டது.அதன் பின், நான் 3 வருடங்களுக்குப் பின் தேர்வெழுதி பட்டம் பெற்றேன்.அது எனது படிப்பு காலத்தில் பெரும் கரும்புள்ளியாக ஆகிவிட்டது.அதனால், வேலைக்கும்    சிரமப்பட்டேன்.அந்த சமயத்தில்,என்  குடும்பம் கஷ்டத்தில் இருந்தது. என்னால், கஷ்டப்பட்ட என் தந்தைக்கு உதவக் கூட முடியவில்லை.என் இயலாமையை எண்ணி, என்னை நானே நொந்து கொள்ளத்தான் முடிந்தது.அதன் பின்,பல இன்னல்களைக் கடந்து தான், நான் இந்த உயர்நிலையை அடைந்துள்ளேன்."என்றான் ராஜா.
                   "கவலைப் படாதே ராஜா, தன்னம்பிக்கையும்,அயராத உழைப்பும் உனக்கு துணை நிற்கும் போது, வெற்றி உனக்கு நிச்சயம் கிட்டும்.எவரேனும் உனக்கிழைத்த தீங்கு,துன்பத்தினை எண்ணிக் கொண்டிருந்தால்,அதுவே உன் வளர்ச்சியை தடை செய்து விடும். அதை நினையாதே...வெற்றி இலக்கு மட்டும் உன் லட்சியமாக இருக்கட்டும்" என்று அறிவுறுத்தினான்.மனதில் ஓர் புத்துணர்வு பிறந்ததாய், கடற்கரையிலிருந்து நண்பனுடன் கிளம்பினான் இராஜா.
  http://www.eegarai.net/t75627p180-6#703305


No comments:

Post a Comment