blank'/> muhilneel: கதை - 1

Tuesday, December 13, 2011

கதை - 1

சுப்ரியாவும் ,சுதனும் ஒரே நிறுவனத்தில் பணிபுரிகின்றனர் .சுப்ரியா வேலைக்கு சேர்ந்ததிலிருந்து சுதனுக்கு இனம் புரிய இன்பம் .அது அவனுக்கு காதலாக மாறியதில் வியப்பு இல்லை .காரணம் சுப்ரியாவின் அழகு அப்படி . பணிநேரத்தில் சுதன் தன்னை அடிக்கடி பார்ப்பதாக சுப்ரியாவுக்கும் தோன்றியது .இரண்டு வருடங்கள் கடந்தும் தன் காதலை அவளிடம் சொல்லவில்லை .இன்று தன் காதலை அவளிடம் சொல்லவேண்டும் என்று நினைத்து அவளுக்காக காத்துயிருந்தான். தொலைவில் அவள் வெள்ளை நிறச் சுடிதாரில் ஒரு தேவதை போல நடந்து வந்து கொண்டுயிருந்தாள் ,அவள் கிட்ட வருவது தெரிந்ததும் , அவளை நெருங்கினான் .. 
அவனிடம் ஏதோ பேச வேண்டும் என்பது போல் வந்த சுப்ரியாவும் அவன் வந்ததும், சுதன் கேண்டீன் போய் காபி சாப்பிட்டுக் கொண்டே பேசலாமா என்றாள்.இருவரும் கேண்டீன் சென்று காபிக்கு ஆர்டர் கொடுத்து விட்டு அமர்ந்தனர்.சுப்ரியா சுதனின் முகத்தைப் பார்ப்பதும், ஏதோ சிந்திப்பதுமாக இருந்தாள்.உடனே சுதன், "என்ன சுப்ரியா, ஏதோ சொல்ல நினைக்கிறீங்க, ஆனா சொல்ல யோசிக்கிறீங்க" என்றான்.அவன் மனதில் அவளும் தன் நிலையில் தான் இருக்கிறாளோ என்று எண்ணினான்.சில நொடி மௌனத்துக்குப் பின் சுப்ரியா வாய் திறந்தாள்.சுதன்,நான் உங்க நண்பர் சுரேஷை காதலிக்கிறேன்.அவரிடம் பேச எனக்கு சந்தர்ப்பம் எதுவும் அமையவில்லை.என்னை அவரிடம் அறிமுகப் படுத்தி வைப்பீர்களா? என்று கேட்டாள்.அவள் கூறிய வார்த்தைகளைக் கேட்ட சுதனுக்கு தலையே சுற்றியது.மௌனமாய் அவ்விடத்தை விட்டு அகன்றான். 

http://www.eegarai.net/t75627p105-4#693065

No comments:

Post a Comment