blank'/> muhilneel: விடுகதைகள் -2

Thursday, November 3, 2011

விடுகதைகள் -2

1.கொதிக்கும் கிணற்றில் குதிப்பானாம்;கூச்சல் இல்லாமல் குளிப்பானாம். -           அவன் யார்? 
2 .கத்திபோல் இலை இருக்கும்;கவரிமான்  பூப்பூக்கும்;தின்னப்பழம்  பழுக்கும்,  தின்னாத காய்             காய்க்கும். - அது என்ன? 
3 .செக்கச் சிவந்திருப்பாள்;செவ்வாழை போல் இருப்பாள்;வாலும் முளைத்திருப்பாள்;வந்திருப்பாள் சந்தையிலே. - அவள் யார்?
4 . பாலாற்றின் நடுவே கறுப்பு மீன் தெரியுது - அது என்ன? 
5 .அழகான பெண்ணுக்கு அதிசயமான வியாதி.
பாதிநாள் குறைவாள் பாதிநாள் வளர்வாள். - அது என்ன?
 
6 . ஆலமரம் தூங்க;அவனியெல்லாம் தூங்க;சீரங்கம் தூங்க;
திருப்பாற்கடல் தூங்க;ஒருவன் மட்டும் தூங்கவில்லை. - அவன் யார்?
  
7 . ஒல்லியான மனிதன்;ஒரே காது மனிதன்;அவன் காது போனால்;
ஏது பயன்? - அவன் யார்?
 
8 . காட்டுக்குப் போனேன்;இரண்டு விறகு கொண்டு வந்தேன்;பகலிலே ஒன்று ,
இரவிலே ஒன்று எரித்தேன். - அது என்ன?
9 . மணி அடித்தால் மலைப்பாம்பு நகரும். - அது என்ன?
10 .சுருக்கென்று குத்தும் முள்;பொறுக்க முடியாது - அது என்ன?  
11 .மாவிலே பழுத்த பழம்;மக்கள் விரும்பும் பழம். அது என்ன? 
12 . கண் சிமிட்டும் ஒன்று;மணி அடிக்கும் மற்றொன்று;கண்ணீர் வடிக்கும் இன்னொன்று. - அது என்ன? 
13 . குண்டோதரன் வயிற்றிலே,குள்ளன் நுழைகிறான். - அவன் யார்?  
14 . பார்த்ததோ இரண்டு பேர்,எடுத்ததோ பத்துப் பேர்,ருசி பார்த்ததோ ஒருத்தன். - அவர்கள்  யார்? 
15 . காகிதத்தை கண்டால் கண்ணீர் விடுவாள்;முக்காடு போட்டால்
சொக்காயில் தொங்குவாள். - அவள் யார்?
16 .கொத்தாரோ தச்சரோ கட்டாத கோபுரம்;சின்னதாயிருக்கும் சித்திரக் கோபுரம். - அது என்ன?
17 .மூட்டை தூக்கி முத்தையன் நத்தையல்ல;தண்ணீரில் இருக்கும் 
தத்தையன் தவளையல்ல. - அவன் யார்? 
18 .சுருங்கினால் எனக்கு அவன் அடக்கம்;விரிந்தால் நான் அவனுக்கு அடக்கம். - அவன் யார்? 
19 .தாளைக் கொடுத்தால் தின்னும்;தண்ணீர் குடித்தால் மடியும் - அது என்ன?  
20 .கால் உண்டு;நடக்க மாட்டான்.முதுகு உண்டு;வளைக்க மாட்டான்.கை உண்டு;மடக்க மாட்டான். - அவன் யார்?  
21 .இதயம் போல் துடிப்பிருக்கும்;இரவு பகல் விழித்திருக்கும். - அது என்ன? 
22 .கன்னங்கரிய அரங்கத்தில் வெள்ளைப்பந்து விளையாடும். - அது என்ன?  
23 .எத்தனை தடவை திறந்து முடினாலும் சின்னச் சத்தம் கூட தராத கதவுகள். - அது என்ன?
24 .கையில்லாமல் நீந்துவான்;கால் இல்லாமல் ஓடுவான். - அவன் யார்?  
25 .ஓகோ மரத்திலே,உச்சாணிக் கிளையிலே,ஓட்டுச் சட்டியிலே
களிமண் இருக்கிறது. - அது என்ன?
 
26 .ஒரு ஊருக்கு ஐந்து வழி - அது என்ன? 
27 .வாசலில் வந்து நின்றவரை வரவேற்க ஆளில்லை - அவர் யார்?  
28 .காட்டுக்குள்ளே நெல் விதைத்தேன்;காக்காய்ம் தின்னவில்லை;
குருவியும் தின்னவில்லை - அது என்ன?
 
29 .இத்தனூண்டு சித்தாளுக்கு,ஏழு சுற்றுக் கண்டாங்கி - அது யார்?  
30 .உப்பை உண்டவன் உறங்காமல் அலைகிறான் - அவன் யார்? 
31 .நூல் இல்லை; ஊசி உண்டு;வாயில்லை; பாட்டுப்பாடும் - அது என்ன? 
32 .மரத்திற்கு மரம் தாவுவான்; குரங்கு அல்ல.பட்டை அடித்திருப்பான்; சாமியாரல்லன். - அவன் யார்? 
33 .பார்ப்பதற்கு ஐந்து கால்;எண்ணுவதற்கு நான்கு கால் - அது யார்? 
34 .முத்து முத்துத் தோரணம் தரையில் விழுந்து ஓடுது - அது என்ன? 
35 .கண்ணுண்டு; செவியில்லை.கண்டிடும்; கேட்டிடும் - அது என்ன?  
36 .கழுத்துண்டு; கையில்லை.நாக்குண்டு; பேச்சில்லை.வாயுண்டு; அசைவில்லை.தொப்பியுண்டு; தலைமயிர் இல்லை. - அது என்ன? 
37 .நெற்றியிலே கண்ணுடையான் கருப்பண்ணன்.நெருப்பைத் திண்பான்; நீரும் குடிப்பான் - அவன் யார்?
38 .ஓடையில் ஓடாத நீர் ஒருவரும் குடிக்காத நீர் - அது என்ன?  
39 .ஆயிரம் குழந்தைகட்டு அரைஞாண் ஒன்று - அது என்ன? 
40 .பாத்தி சிறு பாத்தி;பாய்வது கரு நீர்;வேரோ வெள்ளை வேர்;பூவோ செம்பூ - அது என்ன?  
41 .வளைக்க முடியும்;ஒடிக்க முடியாது - அது என்ன? 
42 .கறுப்புப் பாறையில் வெள்ளைப் பிறை - அது என்ன? 
43 .வெள்ளை மாடு;வாலால் நீர் குடிக்குது - அது என்ன? 
44 .உதைத்தாலும் அடித்தாலும்,ஒன்றாக இருக்கும் - அது என்ன ?
45 .பச்சைப் பெட்டியில் பத்துச் சரம்;எடுத்துப் பார்க்கலாம் - ஆனால்
தொடுத்துப் போட முடியாது - அது என்ன?
 
46 .நாலு மூலைச் சதுரப் பெட்டி - அதன் மேலே ஒடுமாம் குதிரைக் குட்டி! அது   என்ன? 
47 . நாலு உலக்கை குத்திவர,இரண்டு முறம் புடைத்து வர,துடுப்புத் துளாவி 
வர,துரை மக்கள் ஏறிவர. - அது என்ன?
48 .இந்தப் பிள்ளை பெரியவனானால்,படிக்காமலே பலன் தருவான்! - அவன் யார்? 
49 .உயிர் இல்லாப் பறவை;உலகைச் சுற்றி வருது! - அது என்ன?   
50 .இருந்தாலும், பறந்தாலும், இறந்தாலும் இறக்கை மடக்காத பறவை - அது என்ன பறவை?  
51 .நீலக்கடலிலே பஞ்சு மிதக்குது. - அது என்ன?
52 .எட்டாத தூரத்தில் தொட்டில் கட்டி ஆடுது! - அது என்ன? 
53 .கண்ணில் காண உருவம் உண்டு;கட்டிப் பிடிக்க உடல் இல்லை! - அது என்ன? 
54 .சாம்பலாண்டியும் சந்தைக்கு வந்தான்;உச்சிக் குடுமியும் சந்தைக்கு 
வந்தான்; ஒரு முதுகெலும்பனும் சந்தைக்கு வந்தான். அவர்கள் யார்?  
55 .கடையிலே விற்கிற சாமான்களில் அத்தை ஒன்று;ஆணி ஒன்று - அவைகள் என்ன? 
56 .தன்னைத் தானே பலிகொடுப்பான்;பிறருக்கு ஒளி கொடுப்பான். - அவன் யார்?
57 .இத்தனூண்டு சிட்டுக் குருவி,இழுத்து இழுத்து முள் அடைக்குது - அது என்ன?
58 .கட கடா குடு குடு , நடுவிலே பள்ளம்-அது என்ன?
59 . இட்டேன்; எடுக்க முடியவில்லை.பூசினேன்; புடமுடியவில்லை. - அது என்ன?  
60 .காய்த்த மரத்திலே கல் எடுத்துப் போட்டால்,காவல்காரப் பையன் கோபப்பட்டு வருவான். - அவன் யார்?
61 .நாலு மூலை நாடகசாலை;நடுவிலிருக்கும் பாடகசாலை;ஆடும் பெண்கள் பதினாறு;ஆட்டி வைப்பவர் இரண்டுபேர். - அது என்ன? 
62 .பிறக்கும் போது சுருண்டிருப்பாள்;பிறந்த பின்னர் விரிந்திருப்பாள். - அவள் யார்?
63 .குட்டி போடும்;ஆனால் எட்டப் பறக்கும் - அது என்ன?  
64 .தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் தொட்டால் போது; ஒட்டிக் கொள்வான். - அவன் யார்? 
65 .ஓடிப் படர்வேன்; கொடியல்ல.ஒளிமிக உண்டு; நிலவல்ல.மனைகளை அலங்கரிப்பேன்; மலரும் அல்ல. - நான் யார் ?
66 .செடியில் விளையாத பஞ்சு;தறியில் நூற்காத நூல்;கையில் தொடாத துணி! - அது என்ன?  
67 .உச்சியில் குடுமி உண்டு; மனிதனல்லன்.உடம்பெல்லாம் உரோமமுண்டு; குரங்குமல்லன்.உருண்டை விழி மூன்றுண்டு; சிவனுமல்லன் - அவன் யார்?  
68 .காலும் இல்லை;கையும் இல்லை;காடும் மலையும் நெடுகச் செல்வான். அவன் யார்? 
69 .இரவல் கிடைக்காது;இரவில் கிடைக்கும். - அது என்ன? 
70 .வெளியே வெள்ளிக் கட்டி;உள்ளே தங்கக் கட்டி - அது என்ன? 
71 .பாட்டுப்பாடி வருவான்;பட்டென்று அடித்தால் சாவான்! - அவன் யார்? 
72 .வெள்ளை வயலிலே கறுப்புவிதை.கண்ணால் பார்த்தேன்;கையால் எடுக்க முடியவில்லை! - அது என்ன? 
73 .நெருப்பிலே சுட்ட மனிதனுக்கு நீண்ட நாள் வாழ்வு. - அது யாரு? 
74 .பச்சை பாம்பு கல்லைத் தூக்குது! - இது என்ன?  
75 .மொட்டைத் தாத்தாத் தலையிலே இரட்டைப் பிளவு! - அது யாரு?  
76 .எங்கள் ஆயாள் வீட்டுத் தோட்டத்திலே பத்து வாழை மரங்கள் - 
அவைகளை ஆட்டினாலும் ஆட்டலாம்; பிடுங்க முடியாது. - அவை என்ன? 
77 .இந்த ஊரிலே அடிபட்டவன்;அடுத்த ஊரிலே போய்ச் சொல்கிறான். - அவன் யார்?  
78 .இரவும் பகலும் ஓய்வில்லை;அவன் படுத்தால் எழுப்ப ஆள் இல்லை. - அவன் யார்? 
79 .அம்மான் வீட்டுத் தோட்டத்திலே,பட்டாக்கத்தி தொங்குது. - அது என்ன? 
80 .கிண்ணம் போல் - பூ பூக்கும்.கிள்ளி முடிக்க முடியாது... - அது என்ன பூ? 
81 .ஒற்றைக்கால் கறுப்பனுக்கு எட்டுக் கை! - அது என்ன?  
82 .அடர்ந்த காட்டின் நடுவிலே ஒரு பாதை.... - அது என்ன?
83 . பாலாற்றின் நடுவே கறுப்பு மீன் தெரியுது. - அது என்ன?
84 .ஊசி போல் இலையிருக்கும்;ருத்ராட்சம் போல் காய் காய்க்கும். - அது என்ன மரம்? 
85 .ஆற்று மணலை அள்ளித் தின்போம்;நாங்கள் ஒரு சாதி
வெள்ளைக் கல்லை உடைத்துத் தின்போம்;நாங்கள் ஒரு சாதி
ஓணானை போல் உரித்துத் தின்போம்;நாங்கள் ஒரு சாதி - இவுங்க யாரு?
 
86 .எட்டுக்கால் ஊன்றி;இருகால் படமெடுத்து;வட்டக் குடை பிடித்து வருகிறார் துரை மகனார்........ - இவர் யார்?  
87 .விரிந்த ஏரியிலே வெள்ளோட்டம் மிதக்குது! - அது என்ன?  
88 .மஞ்சள் குருவி நெஞ்சைப் பிளந்து மகாதேவனுக்கு பூசை ஆகுது! - அது என்ன?  
89 .பள்ளிக்கூடம் போகிற பாப்பாவுக்குக் கையிலே ஒரு டை;தலையிலே ஒரு டை. - அது என்ன?  
90 .பரட்டைத்தலை மாமியாருக்குப் பவளம் போல் மருமகள்! - அவள் யார்?  
91 .பொழுது சாய்ந்தால் பூந்தோட்டம்;விடிந்து பார்த்தால் வெறுந் தோட்டம்... - அது என்ன? 
92 .அமைதியான பையன்; அடிக்காமல் அழுவான். அவன் யார்?
93 .இலை இல்லை; பூ இல்லை; கொடி உண்டு. அது என்ன?
94 .அதிவேகக் குதிரை, ஆடியபடி செ‌ல்லு‌ம் கு‌திரை போ‌ட்ட கோ‌ட்டை‌த் தா‌ண்டாம‌ல் ஓடு‌ம் அது என்ன? 
95 .எ‌ங்க அ‌‌ம்மா போ‌ட்ட ‌சி‌க்கலை யாராலு‌ம் ‌பி‌ரி‌க்க முடியாது அது என்ன? 
96 . உருளும் வீட்டைச் சுற்றி கருப்பு வேலி. அது என்ன?    
97. ஒரே வ‌யி‌ற்‌றி‌ல் வா‌ழ்‌ந்தாலு‌ம் ஒரு பிள்ளை ஓடுவான், மற்றவன் நடப்பான். அது எ‌ன்ன? 
98.இவ‌ன் வலை ‌பி‌ன்‌னுவா‌ன் ஆனா‌ல் மீ‌ன் ‌பிடி‌க்க மா‌ட்டா‌ன் அவ‌ன் யார்?  
99. அள்ள முடியும்;ஆனால் கிள்ள முடியாது - அது என்ன? 
100.அள்ளவும் முடியாது;கிள்ளவும் முடியாது - அது என்ன? 

.
Source:http://www.thamilworld.com 


No comments:

Post a Comment