blank'/> muhilneel: 2011

Monday, December 26, 2011

கதை - 5

இலக்கம்: 6


இராஜா கம்யூட்டரை ஷட்டவுன் செய்த போது மணி சரியாக மாலை ஏழு மணி. இப்பொழுது அலுவலத்திலிருந்து கிளம்பினால் சரியாக இருக்கும் என நினைத்து , ராஜாவின் கார் நகரின் மூன்று நட்ச்சதிர ஹோட்டலை நோக்கி பயணித்தது . அந்த ஹோட்டலின் அடர்த்தியான குளிர்யூட்டபட்ட பாரில் நுழைந்தபோது , வாழ்வில் யாரை பார்க்க கூடாது என்று நினைத்துயிருந்தரோ ,அவன் அங்கு அமர்ந்துயிருப்பதை பார்த்து வெறுப்புடன் வெளியேறியபோது ,என்ன ராஜா என்னை இங்கு வர சொல்லிவிட்டு நீ எங்கே கிளம்புர குரல் கேட்டு திரும்பியவர் , பேசாமல் என் கூட வா ,நாம் வேற இடம் போகலாம் . என்னவாயிருக்கு இவருக்கு என்று ராஜாவை பின் தொடர்ந்தார் அவரின் நண்பர் குழப்பமாக ..
       வேகமாகச்  சென்று காரின் கதவைத் திறந்து, அமர்ந்து கொண்டு தன்
நண்பர் ரவியை  அமரச் சொன்ன ராஜா, சில நிமிடங்கள் படபடப்பாகவே காணப்பட்டார்.அவரது இந்த திடீர் படபடப்பிற்கு காரணம் புரியாது, என்ன செய்வதென்று அறியாது ரவி அவரைப் பார்த்தபடி, அருகில் அமர்ந்திருந்தார்.கால் மணி நேரத்திற்குப் பின்,ராஜா காரை கிளப்பிக் கொண்டு அந்த நெரிசல் மிகுந்த நெடுஞ்சாலைக்குள் புகுந்தார்.  அங்கிருந்து கிளம்பியதிலிருந்து இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை.கார் கடற்கரையினை அடைந்தது. காரை ஒரு ஓரமாய் நிறுத்திவிட்டு,இருவரும் கடற்கரையினை நோக்கி நடந்தனர்.கடற்கரை மணலில் இருவரும் அமர்ந்தனர். 
           நீண்ட மௌனத்தை கலைக்கும் வகையில் ரவி, " என்ன ராஜா, என்னாச்சு??" என்று கேட்டார்."நான் யாரை என் வாழ்நாளில் பார்க்கக் கூடாது என்றிருந்தேனோ, அவனை அங்கு பார்த்தேன்.அதனால் தான் வேகமாக அங்கிருந்து வந்துவிட்டேன்" என்றான்."என்ன சொல்கிறாய் நீ? எனக்கு ஒன்றும் புரியவில்லையே..." என்றான் ரவி.ஒரு நீண்ட பெருமூச்சிற்குப் பின், ராஜா பேச ஆரம்பித்தான்."நான் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருக்கும் போது, என்னுடன் பயின்றவன் தான் அவன்.வரிசை எண்களில் எனக்கு முன் வருபவன்.தேர்வறையில், எப்போதும் அவனுக்குப் பின் நான் தான் அமர்ந்திருப்பேன். பட்டப்படிப்பின் இறுதித் தேர்வுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயம். அப்போது அவன்,தான் சரியாகப் படிக்கவில்லை என்றும், அவனுக்கு விடைகளைக் காண்பிக்கும்படியும் கூறினான். நான் அவனிடம் எதுவும் பேசாமல் தேர்வெழுதுவதிலேயே கவனமாக இருந்தேன்.அவனும் என்னை காண்பிக்கும்படி தொந்தரவு செய்து கொண்டிருந்தான்.அவன் ஏதோ துண்டுக் காகிதத்தை என் அருகில் வீசினான். நான் ஆத்திரப்பட்டு திரும்ப, அப்போது அங்கு வந்த பறக்கும் படையினரால் நான் அவனிடம் பேசியதாக பிடிக்கப்பட்டு,என்னால் 3 வருட காலத்திற்கு தேர்வுகள்  எதுவும் எழுத முடியாத நிலை ஏற்பட்டது.அதன் பின், நான் 3 வருடங்களுக்குப் பின் தேர்வெழுதி பட்டம் பெற்றேன்.அது எனது படிப்பு காலத்தில் பெரும் கரும்புள்ளியாக ஆகிவிட்டது.அதனால், வேலைக்கும்    சிரமப்பட்டேன்.அந்த சமயத்தில்,என்  குடும்பம் கஷ்டத்தில் இருந்தது. என்னால், கஷ்டப்பட்ட என் தந்தைக்கு உதவக் கூட முடியவில்லை.என் இயலாமையை எண்ணி, என்னை நானே நொந்து கொள்ளத்தான் முடிந்தது.அதன் பின்,பல இன்னல்களைக் கடந்து தான், நான் இந்த உயர்நிலையை அடைந்துள்ளேன்."என்றான் ராஜா.
                   "கவலைப் படாதே ராஜா, தன்னம்பிக்கையும்,அயராத உழைப்பும் உனக்கு துணை நிற்கும் போது, வெற்றி உனக்கு நிச்சயம் கிட்டும்.எவரேனும் உனக்கிழைத்த தீங்கு,துன்பத்தினை எண்ணிக் கொண்டிருந்தால்,அதுவே உன் வளர்ச்சியை தடை செய்து விடும். அதை நினையாதே...வெற்றி இலக்கு மட்டும் உன் லட்சியமாக இருக்கட்டும்" என்று அறிவுறுத்தினான்.மனதில் ஓர் புத்துணர்வு பிறந்ததாய், கடற்கரையிலிருந்து நண்பனுடன் கிளம்பினான் இராஜா.
  http://www.eegarai.net/t75627p180-6#703305


Friday, December 23, 2011

Rare Pictures

1st train on Kovvur-RJY roadrail bridge

Picture of James Street,Secundrabad  taken by Deen Dayal in the 1880s, from the Curzon Collection: 'Views of HH the Nizam's Dominions, Hyderabad, Deccan, 1892'
The front page of The Hindustan Times on August 15, 1947
IIT,Delhi in 1961
Like a Man She Fought, She was the Queen of Jhansi ★ RANI OF JHANSI'S ORIGINAL PIC TAKEN BY ENGLISH PHOTOGRAPHER HOFFMAN 159 YEARS AGO THIS PIC WAS RECENTLY SHOWN IN WORLD PHOTOGRAPHY EXHIBITION IN BHOPAL ON 19TH AUGUST 2010....SOURCE IBN7
Original Photograph of Rani Lakshmi Bai, taken by Halfmen British Photographer

1st train on Kovvur-RJY roadrail bridge


Wednesday, December 21, 2011

நடுவெழுத்து அலங்காரம்

அடிக்கடி பெண்டிர் போட்டுவைத் திடுமிடம் (1)
--------------அழகிய தாய்மொழி அதன்பெயர் ஒன்று (2)
பிடித்த தலைவரைப் வாழ்த்தியே முழக்கும்சொல் (3)
--------------பேர் ”விருப்பம்” என்பதின் முன்றெழுத் துச்சொல் (4)
தடித்ததோர் யானையின் தடங்செவி என்பதைத்
--------------தரமாய் முன்றெழுத் திலாக்க வருங்சொல் (5)
படிக்கப் படிக்க பெருங்கடல் போன்றது (6)
----------------படிக்கும் பாவகையின் மூன்றெழுத்து மறுசொல்(7)


இவ்விருத்தம் 'நடுவெழுத்து அலங்காரம்' என்று வைத்துக்கொள்ளலாம். நன்றாக யோசித்து உள்ளே மறைந்திருக்கும் பெயர் என்ன என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.

விடை:
1.நுதல்
2.தமிழ்
3.வாழ்க
4.இச்சை
5.மாசெவி 

6.கல்வி
7.கவிதை
பெயர் : தமிழ்ச்செல்வி 
Highlight to see the answers.


http://www.eegarai.net/t76813p30-topic

கதை-4(Modifications in Hint Given)

  ராம்சரண் வளரும் தொழிலதிபர். அடையாறில் உள்ள அவரது பங்களாவில் சோகமும் , அழுகையும் சூழ்ந்துயிருந்தது . காரணம் பள்ளி சென்ற ஆறு வயது மகள் இன்னும் வீடு திரும்பவில்லை. ராம்சரணின் மனைவியை சுற்றி பல கிளப்பை சேர்ந்த பெண் தோழிகள் அவருக்கு ஆறுதல் சொல்லிகொண்டுயிருந்தனர் யாராவது கடத்திவிட்டு பணம் கேட்டுமிரட்டினார்களா , தொழில் முறை எதிர்கள் , யார் மீது சந்தேகம் போன்ற காவல் துறையின் பல கேள்விகளுக்கு அவரிடம் பதில் இல்லை. வழக்கை எப்படி எடுத்துச்செல்வது என்று காவல்துறைக்கும் குழப்பம்.காவல் துறை சென்ற சற்று நேரத்திற்குள் அவர் மனதில் உதித்தது அந்த சந்தேகம் , தொலைபேசியை நோக்கி நடந்தார், அப்பொழுது................
          அவருக்காகவே காத்திருந்தது போல், தொலைபேசி மணி ஒலித்தது.ஒருவித நடுக்கத்துடனே ராம் தொலைபேசியை எடுத்தார்."ஹலோ,ராம்சரண் ஹியர்" என்றார்.எதிர் முனையில் ஓர் கரகரப்பான குரல்."ஹலோ ராம், என்ன பொண்ணைக் காணோம் என்றதும் ரொம்ப ஆடிப் போயிட்டியா??" என்றது.ராமிற்கு முகமெல்லாம் வியர்த்துப் போயிற்று."ஹலோ,நீங்க யாரு? எங்க இருந்து பேசறிங்க? என் பொண்ணுக்கு என்ன ஆச்சு?" என்று பதட்டத்துடன் கேட்டார்."உன் பொண்ணு உனக்கு வேணும்னா 10 லட்சம் ரூபாய் எடுத்துட்டு மகாபலிபுரம் ரோட்ல இருக்குற சவுக்குத் தோப்பு கிட்ட வா.போலீஸ் கிட்ட போன, என்ன நடக்கும்னு எனக்கே தெரியாது" என்று மிரட்டும் தொனியில் கூறியது அக்குரல்.வீட்டிலிருந்த நண்பர்கள் அனைவரும்,"போலீஸ் கிட்ட போக வேண்டாம்.கேட்ட பணத்தைக் குடுத்துட்டு பொண்ண கூட்டிட்டு வந்துரலாம்" என்றனர்.ராம்சரணுக்கும் அதுவே சரியெனப் பட, அவரும் அவசர அவசரமாய்,பீரோவில் இருந்த  பணத்தை எடுத்து பெட்டியில் அடுக்கினார்.பெட்டியை எடுத்துக் கொண்டு காரிலேறி விரைவாகப் புறப்பட்டார்.
            சவுக்குத் தோப்பிற்கு அருகில் சென்றதும்,காரை ஒரு ஓரமாக நிறுத்தி விட்டு,பெட்டியை எடுத்துக் கொண்டு, சாலையோரம் நின்று எவரேனும் அங்கு இருக்கிறார்களா என்று பார்த்தார்.கால் மணி நேர காத்திருப்பிற்குப் பின், ஒருவன்    வருவது தெரிந்தது.அவன் ,ராம்சரணை
தோப்பிற்குள் வருமாறு சைகை காட்டினான்.உள்ளே சென்ற ராம்சரண்,அங்கு நின்றிருந்த இளைஞனை  பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தார். அவன்,ராம்சரனின்  நண்பர் ஜெயராமின் மகன் விதார்த்.அவன்,ராம்சரணை அருகிருந்த பாழடைந்த வீட்டிற்கு அழைத்துச் சென்றான்.அந்த வீட்டில், அறையின் ஒரு மூலையில் அவரது மகள் கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்தாள்.அவளைப் பார்த்ததும் தான்,ராம்சரணுக்கு உயிரே வந்தது.
        விதார்த் பேச ஆரம்பித்தான். "எங்க அப்பா கிட்ட வியாபாரம் ஆரம்பிக்கப் போறேன்னு சொல்லி பத்து லட்சம் ரூபாய் வாங்கினீர்கள்.என் அப்பாவும், உங்கள் மீதுள்ள நம்பிக்கையில்,எந்தப் பத்திரத்திலும் கையெழுத்து வாங்காமல், உங்களது நட்பின் மீது கொண்ட நம்பிக்கையால்,உங்களுக்கு பத்து லட்சம் கொடுத்தார்.அதை வைத்து நீங்கள் வியாபாரம் செய்து முன்னேறி விட்டர்கள்.வசதியாக வாழ்கிறீர்கள்.எங்களது வியாபாரம் நொடித்ததால், சென்ற மாதம் என் தந்தை உங்களிடம் உதவி கேட்டு வந்த போது, நீங்கள் அவரை அவமானப் படுத்தி,அவரை கேவலமாக பேசி அனுப்பி விட்டர்கள்.செய்நன்றி மறந்த உங்களுக்கு ஒரு பாடம் கற்பிக்கவே நான் உங்கள் குழந்தையைக் கடத்தினேன்.உங்களது தவறை நீங்கள் உணர வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு செய்தேன்." என்றான்.தலை குனிந்த ராம்சரண்,என்னை மன்னித்து விடுப்பா....இந்த பணத்தைப் பெற்றுக் கொள்" என்று கூறி, பணப்பெட்டியை விதார்திடம் கொடுத்தார்.  
     அப்போது, ராம்சரணை தொடர்ந்து வந்திருந்த போலீஸ், ஏமாற்றிய குற்றத்திற்காக ராம்சரணையும், கடத்தல் குற்றத்திற்காக விதார்த்தையும் கைது செய்தனர்.

http://www.eegarai.net/t75627p150-5#698899 

Tuesday, December 20, 2011

கதை-4



ராம்சரண் வளரும் தொழிலதிபர்.அடையாறில் உள்ள அவரது பங்களாவில் சோகமும் , அழுகையும் சூழ்ந்திருந்தது . காரணம், பள்ளி சென்ற அவர்களது ஆறு வயது மகள் இன்னும் வீடு திரும்பவில்லை. ராம்சரணின் மனைவியை சுற்றி பல கிளப்பை சேர்ந்த பெண் தோழிகள் அவருக்கு ஆறுதல் சொல்லிக்  கொண்டிருந்தனர். யாராவது கடத்திவிட்டு பணம் கேட்டு மிரட்டினார்களா , தொழில் முறை எதிரிகள் , யார் மீது சந்தேகம் போன்ற காவல் துறையின் பல கேள்விகளுக்கு அவரிடம் பதில் இல்லை .வழக்கை எப்படி எடுத்துச்செல்வது என்று காவல்துறைக்கும் குழப்பம் .
            அனைவரும் ஏதேதோ பேசிக் கொண்டிருந்தனர்.யாருக்கும் என்ன செய்வதென்றே புரியவில்லை.காவல் துறையினரும் அந்த நகரில் இருக்கும் காவல் நிலையங்களுக்கு தகவல் அனுப்பிக் கொண்டிருந்தனர்.இப்படியே ஒரு மணி நேரம் கழிந்தது.அவளைப் பற்றி எந்தவிதமான தகவலும் கிடைக்கவில்லை.மகளைக் காணவில்லை என்ற நினைப்பில், தாய் தேஜஸ்வினிக்கு மயக்கமே வந்து விட்டது.அவளுக்கு ஒருபுறம் மருத்துவ உதவி நடந்து கொண்டிருந்தது.ராம்சரண் கார் டிரைவரை அடிக்காத குறையாக, காரசாரமாய் திட்டிக் கொண்டிருந்தார்."ஸ்கூல் விடுகிற டைமுக்கு எங்க போய் ஊர் சுத்திட்டு இருந்த?" என்று கத்த, டிரைவரோ, "சார், நான் கரெக்டா ஸ்கூல் விடுற டைமுக்கு ஸ்கூல் கேட் கிட்ட தான் சார் இருந்தேன்.பாப்பா வரலை சார், கொஞ்ச நேரம் கழிச்சு டீச்சர் கிட்ட போய் கேட்டதுக்கு, அவங்க, பாப்பா விட்டதும் போய்டுச்சுன்னு சொன்னாங்க சார் .நானும் இவ்வளவு நேரம் அங்க தேடிப் பாத்துட்டு தான் சார் வரேன்" என்றான்.தேஜஸ்வினியின் தோழிகள் அவளுக்கு ஆறுதல் கூறி தேற்றிக் கொண்டிருந்தனர். ராமின் நண்பர்களும் அலைபேசியில் யார் யாரையோ அழைத்து பேசிக் கொண்டிருந்தனர்.
             மணி ஏழு அடித்தது.அப்போது யாரோ வீட்டின் கேட்டினை  திறந்து கொண்டு வரும் சத்தம் கேட்டது.கார் டிரைவர் வேகமாக ஓடிச் சென்று பார்த்தான்.அங்கு, கேட்டினைத் திறந்து கொண்டு அவர்களது சிறுமி சிந்தியா வந்துகொண்டிருந்தாள். குழந்தையை தேஜஸ்வினி ஓடி வந்து வாரி அணைத்துக் கொண்டாள்."எங்கடா செல்லம் போய்ட்ட,உன்னை யாரவது பிடிச்சிட்டு போயிட்டாங்களா??,யாரவது ஏதாவது சாப்பிட கொடுத்து,உன்னை தூக்கிட்டு போயிட்டாங்களா??" என்று கேள்வி மேல் கேள்வியாக அடுக்கிக் கொண்டே இருந்தாள்.கூட்டத்தைக் கண்டு மிரண்ட குழந்தை,மெதுவாக வாய் திறந்தது."மம்மி, நான் பக்கத்து தெருவுல இருக்க பிரியா வீட்டுக்கு போய் ஹோம் வொர்க் பண்ணிட்டு வரேன்.அவளை அவங்க மம்மி கூப்பிட வந்தப்போ, நானும் அவங்க கூட போயிட்டேன்.வீட்ல நீயோ,டாடியோ எனக்கு ஹோம் வொர்க் சொல்லிக் குடுக்கறது இல்ல.அதனால அவள் கூட போய், அவங்க மம்மி சொல்லிக் குடுத்த ஹோம் வொர்க் பண்ணி முடிச்சிட்டு வரேன்"என்றாள்.அனைவரும் மௌனமாய் வாயடைத்து, பிள்ளைகளுக்கு, பெற்றவர்களின் அருகாமை எவ்வளவு முக்கியம் என்று உணர்ந்தவர்களாய் நின்றனர்.



http://www.eegarai.net/t75627p150-5#698060         

Wednesday, December 14, 2011

கர்மவீரர் காமராஜர் புகைப்படம்.

கர்மவீரர் காமராஜரும் அவரது அமைச்சரவை சகா, களங்கம் இல்லா வீரர் கக்கனும்......



நன்றி, ஆனந்த விகடன் (2 - 11 - 2011 )



Tuesday, December 13, 2011

கதை-3

நண்பகல் 12:00 மணி ..

கடற்கரையில் இருந்த சில்லறை வியாபாரிகளுக்கு இன்று வெயில் அதிகம் போல தோன்றியது .ஆனால் சிவாவுக்கு அப்படி தோன்றவில்லை. கடிகாரத்தில் மணி பார்த்து ,அரைமணி நேரம் முன்னதாகவே வந்த்துவிட்டதாக மகிழ்ச்சி.மணி மூன்றை நெருங்கியது தொடர்பு கொண்ட கைப்பேசி அனைத்துவைக்கபட்டுயிருந்தது .வெறுப்பில் மணலை உதைத்தபோது தரையில் ஏதோ மின்னியது .அது கல்லூரிபெண்ணின் அடையாள அட்டை ,பின் பக்கத்தில் அவளின் முகவரியும் , கைபேசி எண்ணும் இருந்தது ..
அந்த எண்ணைத் தொடர்பு கொள்ள முயற்சித்தான் சிவா.ஆனால் யாரும் அலைபேசியை எடுக்கவில்லை.என்ன செய்வதென்று அறியாமல், அதில் உள்ள முகவரிக்குச் சென்று பார்க்க எண்ணினான்.உடனே அங்கிருந்து கிளம்பி,அந்த அடையாள அட்டையில் குறிப்பிட்டுள்ள முகவரியை தேடிச் சென்றான்.ஒருவாரு, அந்த முகவரியைக் கண்டுபிடித்து,வீட்டின் கதவைத் தட்டினான்.ஒரு அம்மா வந்து கதவைத் திறந்தார்.யார் என்று தெரியாததால் குழப்பமடைந்து, சிவாவின் முகத்தைப் பார்த்தார்.உடனே சிவா,"அம்மா,இந்த அடையாள அட்டை கடற்கரையில் கிடந்தது.அதில் உள்ள தொலைபேசி எண்ணை பலமுறை அழைத்துப் பார்த்தேன் .யாரும் எடுக்கவில்லை.எனவே தான் கொடுத்து விட்டுப் போகலாம் என்று வந்தேன்"என்றான்.அப்போது உள்ளிருந்து ஓடி வந்த ஒரு பெண்.."ரொம்ப நன்றிங்க, இதை காணோம் என்று தேடிக்கொண்டிருந்தேன்.இது இல்லைனா என்னால நாளைக்கி எக்ஸாம் எழுத முடியாது...நல்ல நேரத்துல உதவி செஞ்சீங்க" என்று நா தழுதழுக்க கூறினாள்.ஒருவருக்கு,தன்னால் குறித்த நேரத்தில் உதவ முடிந்ததே என்று எண்ணி சிவா மனமகிழ்ச்சி கொண்டான்.


கதை - 2

இன்று மதியம் அகல்யாவை பெண்பார்க்க வருகின்றனர் என்று தரகர் சொல்லிவிட்டு சென்றவுடன் ,இராமநாதன் மனதில் சந்தோஷமும் ,கவலையும் ஆட்கொண்டது .அந்த வீட்டில் அரசு தந்த இலவச தொலைக்காட்சி பெட்டியை தவிர உயர்ந்த பொருள் ஏதும் இல்லை. இந்த தை மாதத்துடன் தான் மகளுக்கு முப்பது வயது முடியபோகின்றது போன்ற பல கவலைகள் . ஆனால் அகல்யாவுக்கு வேறு கவலைகள் எத்தனை முறை தன்னை அலங்கரித்துக்கொள்வது என்று நினைப்புடன் ஜன்னல் வழியாக சாலையை வெறித்து பார்த்துக்கொண்டுயிருந்தாள் .அப்பொழுது தீடீரென்று பெரிய சத்தம் ஒன்று கேட்டது .
   மாப்பிள்ளை வீட்டார் வந்து விட்டார்கள் என்று அறிந்ததும், குடும்பத்தினர் அனைவரும் பரபரப்பாக செயல்பட ஆரம்பித்தனர்.இராமநாதன் அனைவரையும் வரவேற்று அமரச் செய்தார்.சிறிது நேரம் ஏதோ பொதுவான விஷயங்கள் பேசிக் கொண்டிருந்தார்கள்.பின், மாப்பிள்ளை வீட்டாரில் ஒரு பெரியவர், பெண்ணை வரச் சொல்லுங்கள் என்றார்.அகல்யா சபைக்கு வந்து அனைவரையும் நமஸ்கரித்து விட்டு, தன் தாய் கொடுத்த காபி தட்டை வாங்கிக் கொண்டு வந்து அங்கு அமர்ந்திருந்தவர்களுக்கு கொடுத்தாள்.கொடுத்துவிட்டு அவளை உள்ளே அனுப்பி விட்டனர்.பின்,இரு குடும்பத்துப் பெரியவர்களும் பேச ஆரம்பித்தனர்.மாபிள்ளையின் தாய் முதலில் ஆரம்பித்தார்."பொண்ணுக்கு எவ்வளவு போடுவீங்க?" என்றார்.எங்கள் சக்திக்கு எங்களால் முடிந்தது பத்து
பவுண் நகை.அதை போட்டு,கல்யாணத்தை முடிக்கிறோம் என்றனர்.உடனே, மாபிள்ளையின் தாய், "பொண்ணு கருப்பா இருக்கு....இன்னும் கொஞ்சம் நகை சேர்த்துப் போட்டால்,வருகிற முகூர்த்தத்திலேயே கல்யாணத்தை வைத்துக் கொள்ளலாம்" என்றார்.அதைக் கேட்டு  வருந்திக் கொண்டிருந்ததாள்  அகல்யா.
அப்போது, தன் தாயின் பேச்சினைக் குறுக்கிட்டு மாப்பிள்ளை,"சார்,எனக்கு உங்க பொண்ணை ரொம்ப பிடிச்சிருக்கு.நீங்க உங்களால் முடிந்த நகையைப்  போட்டு திருமணத்தை நடத்துங்கள்" என்றார்.அதைக் கேட்டதும், அகல்யாவின் மனதில் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் சிறகடித்தன.இராமநாதன் கண்கள் குளமாயின.தன் மகளுக்கு கிடைத்த நல்வாழ்வை எண்ணி இறைவனுக்கு நன்றி கூறினார்.அந்த இடத்தில மகிழ்ச்சி தாண்டவமாடியது........



கதை - 1

சுப்ரியாவும் ,சுதனும் ஒரே நிறுவனத்தில் பணிபுரிகின்றனர் .சுப்ரியா வேலைக்கு சேர்ந்ததிலிருந்து சுதனுக்கு இனம் புரிய இன்பம் .அது அவனுக்கு காதலாக மாறியதில் வியப்பு இல்லை .காரணம் சுப்ரியாவின் அழகு அப்படி . பணிநேரத்தில் சுதன் தன்னை அடிக்கடி பார்ப்பதாக சுப்ரியாவுக்கும் தோன்றியது .இரண்டு வருடங்கள் கடந்தும் தன் காதலை அவளிடம் சொல்லவில்லை .இன்று தன் காதலை அவளிடம் சொல்லவேண்டும் என்று நினைத்து அவளுக்காக காத்துயிருந்தான். தொலைவில் அவள் வெள்ளை நிறச் சுடிதாரில் ஒரு தேவதை போல நடந்து வந்து கொண்டுயிருந்தாள் ,அவள் கிட்ட வருவது தெரிந்ததும் , அவளை நெருங்கினான் .. 
அவனிடம் ஏதோ பேச வேண்டும் என்பது போல் வந்த சுப்ரியாவும் அவன் வந்ததும், சுதன் கேண்டீன் போய் காபி சாப்பிட்டுக் கொண்டே பேசலாமா என்றாள்.இருவரும் கேண்டீன் சென்று காபிக்கு ஆர்டர் கொடுத்து விட்டு அமர்ந்தனர்.சுப்ரியா சுதனின் முகத்தைப் பார்ப்பதும், ஏதோ சிந்திப்பதுமாக இருந்தாள்.உடனே சுதன், "என்ன சுப்ரியா, ஏதோ சொல்ல நினைக்கிறீங்க, ஆனா சொல்ல யோசிக்கிறீங்க" என்றான்.அவன் மனதில் அவளும் தன் நிலையில் தான் இருக்கிறாளோ என்று எண்ணினான்.சில நொடி மௌனத்துக்குப் பின் சுப்ரியா வாய் திறந்தாள்.சுதன்,நான் உங்க நண்பர் சுரேஷை காதலிக்கிறேன்.அவரிடம் பேச எனக்கு சந்தர்ப்பம் எதுவும் அமையவில்லை.என்னை அவரிடம் அறிமுகப் படுத்தி வைப்பீர்களா? என்று கேட்டாள்.அவள் கூறிய வார்த்தைகளைக் கேட்ட சுதனுக்கு தலையே சுற்றியது.மௌனமாய் அவ்விடத்தை விட்டு அகன்றான். 

http://www.eegarai.net/t75627p105-4#693065

Sunday, December 11, 2011

நீங்கள் கூகுள் க்ரோம் பயன்படுத்துபவரா ???

நீங்கள் கூகுள் க்ரோம்   பயன்படுத்துபவரா அப்படியானால் இதை அவசியம் படியுங்கள் இன்றய browser ல் கூகுல் குறோமி தனக்கென ஒரு முத்திரை பதித்துள்ளது.அதிகமானோர் விரும்பிப் பயன் படுத்தும் browser இதில் அனைத்துவிதமான வசதிகளும் உள்ளன இந்த நவீன வசதிகளைக் கொண்ட குறோமியில் இருக்கும் மிகப்பெரிய ஆபத்து என்னவென்பதை பார்ப்போம். அனைவரது வீட்டிலும் இணைய இணைப்பு இருப்பதில்லை அதற்காக நாம் பிரவுஸிங் செண்டெர்களைத்தேடிச் சென்று நமது தேவைகளை பூர்த்தி செய்துகொள்கின்றோம் நீங்கள் செல்லும் இடத்தில் இருப்பவர்கள் அனைவரும் நல்லவர்களாக இருப்பார்கள் என்று சொல்ல முடியாது அகவே நீங்கள்தான் உஷாராக இருக்கவேண்டும்.

அதுவும் பெண்கள் அதிக கவனம் தேவை உங்கள் மெயில் முகவரி மட்டுமல்ல பயன்படுத்தும் கடவுச்சொல்லையும் பதிவு செய்யும் வசதி இந்த குறோமியில் உள்ளது என்பது உங்களிட்கு தெரியுமா? நீங்கள் மிகவும் கவனமாக சைன் அவுட் செய்துவிட்டு சென்றுவிடுவீர்கள் ஆனால் உங்கள் மெயில் முகவரியும் கடவுச் சொல்லும் பத்திரமாக செமிக்கப்பட்டிருக்கும் என்பது உங்களிட்கு தெரியாது. நீங்கள் முக்கியமானவர்களிட்கு ஏதெனும் மெயில் அனுப்பியிருக்களாம் அல்லது உங்கள தகவல்களை சேமித்து வைத்திருக்களாம் இதை அவர்கள் தவறாக பயன்படுத்தவும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன அதைவிட உங்கள் நண்பர்களிட்கோ அல்லது முக்கியமானவர்களிட்கோ தவறாக மெயில் அனுப்பலாம்.

அவர்கள் நீங்கள் அனுப்பியதாகவே நினைத்து உங்கள் அன்பை வெறுத்துவிடுவார்கள் இனிமேல் உங்களிட்கு அந்தப்பிரச்சினை இல்லை நாம் சொல்வது போல் செய்தால் போதும். எங்கு சென்று குறோமி பயன்படுத்தினாலும் ஓபன் செய்தபின் அதன் setting option என்பதை கிளிக் செய்யுங்கள் கீழ் உள்ள படத்தினை பாருங்கள். அதில் basic என்பதற்கு கீழ் இருக்கும் personal setup என்பதை கிளிக் செய்து password என்பதை தெரிவுசெய்து neversave passwords என்பதில் டிக் செய்யுங்கள் கீழ் உள்ள படத்தினை பாருங்கள். அவ்வளவுதான் இனி உங்கள் வேலைகளை முடித்தபின் history கிளிக் செய்து clear all browsing data என்பதை கிளிக் செய்யுங்கள் உங்கள் டேடாக்களை பதுகாப்பது எப்பவும் உங்களிடமே உள்ளது

http://puthiyaulakam.com

Eggless Marble Cake - Step by Step Recipe | Sharmis Passions

Spicy chettinad egg gravy | Sharmis Passions

Thursday, December 8, 2011

ஹைக்கூ எழுதுவது எப்படி!


ஹைக்கூ எழுதுவது எப்படி!


                    ‘ஹைக்கூ’ ஜப்பானிய மொழிக் கவிதை. 3 அடிகள் கொண்டது. மூன்று அடிகள் கொண்ட ஜப்பானிய ஹைக்கூ ஐந்து, ஏழு, ஐந்து சீர்களைக் கொண்டு 17 சீர்களில் ஹைக்கூ படைக்கப்படும் (தமிழுக்கு இந்த சீர் எண்ணிக்கை தேவையில்லை). ஜென் தத்துவத்தோடு இயற்கை மற்றும் மெய்யியலோடு தொடர்பு கொண்டது. கவித்துவம் கொண்டது. இந்தியாவின் (தமிழ்நாடு உள்பட) சூழலுக்கு ஜப்பானிய ஹைக்கூவின் உள்ளடக்கக் கோட்பாடு பொருந்தி வராது என்ற போதிலும் எப்படியோ இந்தியாவில் (தமிழ்நாடு உள்பட) ஓர் இலக்கிய வடிவமாக / கவிதையாக இடம் பிடித்துவிட்டது. பெரும்பான்மையாக தமிழ்நாட்டு ஹைக்கூ 3 அடிகள் கொண்டு எழுதப்படுகிறது. அவ்வாறு 3 அடிகள் கொண்டு எழுதப்படுவதை தமிழ் அறிஞர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டதோடு ‘ஹைக்கூ’ வடிவமாகவும் அங்கீகரித்துள்ளார்கள்.

இந்தியாவின் (தமிழ்நாடு உள்பட) சூழலுக்கு ஜப்பானிய ஹைக்கூவின் உள்ளடக்கக் கோட்பாடு பொருந்தி வராது என்ற போதிலும் தமிழ் ‘ஹைக்கூ’ இயற்கை, மெய்யியல் மற்றும் கவித்துவம் கொண்டதாக இருப்பது சிறப்பு. இன்று எழுதப்படுவதெல்லாம் ‘புதுக்கவிதை’ என்பது போல ‘ஹைக்கூ’ பற்றிய சரியான புரிதல் இல்லாமல் 3 அடிகள்கொண்டு எழுதப்படுவது எல்லாம் ‘ஹைக்கூ’ என்பதால் ஹைக்கூவின் உள்ளடக்கம் தாழ்ந்துபோய் உள்ளது. ஜப்பானிய ஹைக்கூவின் தமிழ் மொழிபெயர்ப்பை தவிர்த்து விட்டால் 1974ல் கவிக்கோ அப்துல் ரகுமான் தமிழில் முதன்முதலாக ஹைக்கூ படைத்துள்ளார். இன்று பல ஆயிரம் பேர் தமிழில் ஹைக்கூ எழுதி வருகிறார்கள். தமிழில் ‘ஹைக்கூ’விற்கென்றே சில தனி சிற்றிதழ்கள் வெளிவந்து கொண்டுள்ளன.

ஹைக்கூ மரபுகள்
1. ஹைக்கூ மூன்று வரியாக இருக்க வேண்டும்.
2. ஹைக்கூவுக்குத் தலைப்பிட்டு எழுதக் கூடாது. ஒரு ஹைக்கூவிற்கு இரண்டுக்கு மேற்பட்ட அல்லது குறைந்த பட்சம் இரண்டு உட்கருத்தாவது (குறியீடு போல; உட்பொருள்) இருக்க வேண்டும்.
கவிக்கோ அப்துல் ரகுமான் கூற்று:
ஹைக்கூவில் நாம் கடைபிடிக்க வேண்டிய மூன்று முக்கிய மரபுகள் உண்டு.
1. ஹைக்கூவில் முதல் அடி ஒரு கூறு. ஈற்றடி ஒரு கூறு. ஹைக்கூவின் அழகும் ஆற்றலும் ஈற்றடியில்தான் உள்ளது. ஈற்றடி ஒரு திடீர் வெளிப்பாட்டை, உணர்வு அதிர்ச்சியை ஏற்படுத்தி முழுக் கவிதையையும் வெளிச்சப்படுத்த வேண்டும்.
2. மற்றொரு மரபு ஹைக்கூவின் மொழி அமைப்பு. ஹைக்கூவின் மொழி ஊழல் சதையற்ற மொழி. தந்தி மொழியைப் போல், அவசியமற்ற இணைப்புச் சொற்களை விட்டு விட வேண்டும்.
3. உயிர் நாடியான ஈற்றடியில் ஆற்றல் மிக்க வெளிப்பாட்டிற்காகப் பெயர்ச் சொல்லையே பயன்படுத்த வேண்டும்.
மேற்கண்டவற்றை ஹைக்கூப் படைப்பாளர்கள் கடைபிடிக்க வேண்டும். ஏனென்றால் ஹைக்கூவின் அடையாளமும், அழகும், ஆற்றலும் இவற்றில்தான் இருக்கின்றன.

ஹைக்கூ வாசிப்பு முறை
ஹைக்கூவை முறையாக எப்படி வாசிக்க வேண்டும் என்ற புரிதல் ஹைக்கூ எழுதுபவர்களுக்குக் கூட தெரியாமல் இருப்பது வினோதமானது. 3 அடிகள் கொண்ட ஹைக்கூவை முதல் இரண்டு அடிகளை தொடர்ந்து படித்து நிறுத்த வேண்டும்(மூன்றாவது அடியைப் படிக்கக் கூடாது). மீண்டும் முதல் இரண்டு அடிகளை படித்து நிறுத்தி மூன்றாவது அடியைப் படிக்க வேண்டும். அப்படிப் படிக்கும் போது அந்த இறுதி அடி எதிர்பாராதத் திருப்பம் கொண்டதாக இருக்க வேண்டும். இப்போது ஹைக்கூ எழுதுபவர்கள் இந்த எளிமையான முறையை மட்டுமே கடைபிடித்தால் கூட அவர்கள் எழுதும் ஹைக்கூவை மேலும் சிறப்பாகப் படைக்க முடியும். 
 
 
நன்றி, ஈகரை.com

Thursday, December 1, 2011

புதிர்-2

1) ஒரு ஊரில்  ஒரு ராஜா தன் அழகான மகளுக்கு    மணமுடிக்க நினைத்தானாம்.கேள்விப்பட்ட இராஜகுமாரர்கள் ஏராளமான போ் நான் நீ என போட்டி போட்டனர் . யோசித்த இராஜா ஒரு போட்டியை ஏற்பாடு செய்தான். அழகான செயற்கையான ஒரு குகையை செயது உள்ளே இளவரசியை விட்டு வாசல் கதவு இல்லாமல் அடைத்து விட்டானாம். அந்த குகையை சுற்றிலும் பறவைகள், விலங்குகள்,மனிதர்கள் போன்ற சித்திரங்களை வரைந்து அழகாக்கி செம்மை  படுத்தினானாம்.அந்த குகைக்கு ஒரு வாசல் உண்டு. அந்த வாசலில் ஒரு வாசகம் உண்டு.அது ” நான் குகை என்னைத் தொட வேணடும்” என்றிருக்கும் .இப்போது, குகையை எந்த விதமான சேதமும் இல்லாமல் யார் இளவரசியை வெளியே கொணடு வருகிறார்களோ அவர்களுக்கே மணமுடித்து தருவதாக அறிவித்தானாம்.

அதன்படியே ஒரு இராஜ குமாரன் வெற்றி பெற்றான்? எப்படி?

2) ஒரு மனிதனால்தான் உருவாக்கப்படுகிறது...ஆனால் எந்த மனிதனுக்கும் அதில் விருப்பமில்லை. ஒரு மனிதனால்தான் அது வாங்கப்படுகிறது. ....ஆனால் அது அவனுக்குத் தேவையில்லை.ஒரு மனிதனுக்கு அது தேவை...ஆனால் அதை வாங்கியது அவனுக்குத் தெரியாது.அது என்ன????

3) ஐந்து அடுக்கு நான்கு இடுக்கு அது என்ன? 


4)வேதவர்மன் அரண்மனையில் அமைச்சர்கள், புலவர்கள், சேவகர்கள், அரசாங்க ஊழியர்கள் பலர் வேலை பார்த்து வந்தனர். அவர்களில் சாமிநாதன் என்று ஒரு புலவர் இருந்தார். அவருக்கு பூமதி என்ற மகள் இருந்தாள்.  பூமதி அழகிலும் அறிவிலும் சிறந்து விளங்கினாள்.  ஒருமுறை அரசர் அரண்மனையில் வேலை பார்க்கும் ஊழியர்களின் குழந்தைகளை அழைத்து சோதிக்க விரும்பினார். எனவே எல்லாக் குழந்தைகளையும் அழைத்து-  "குழந்தைகளே! நான் உங்களிடம் மூன்று கேள்விகள் கேட்கப் போகிறேன். சிறந்த பதில்களை எழுதும் குழந்தைக்குப் பரிசு தரப் போகிறேன்' என்றார்.  அவருடைய கேள்விகள்: முதலாவது கேள்வி - ஒரு மனிதனுடைய வயிற்றை எது நன்கு நிரப்புகிறது? இரண்டாவது - எது அவனுக்கு மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது? மூன்றாவது - அதிவிரைவாகச் செல்வது எது?  நன்கு சிந்தித்து, சிறந்த பதில்களை சில நாட்கள் அவகாசமும் கொடுத்தார்.  அரசர் கொடுத்த அவகாசம் முடிந்து பதில்களைப் பார்க்கும் நாள் வந்தது.  எல்லோரும் பதில் எழுதியிருந்தார்கள்.  முதல் கேள்விக்கு எல்லோரும் அவரவர்களுக்குப் பிடித்த உணவு வகைகளையும் அரிசி, பழவகைகளையும் எழுதியிருந்தார்கள்.  இரண்டாவது கேள்விக்குப் பணம், நகைகள் மற்றும் வீடு வாசல்கள் அதிக மகிழ்ச்சியைத் தருகின்றன என்று கூறியிருந்தார்கள்.  அதிக விரைவாகச் செல்வது எது என்ற மூன்றாவது கேள்விக்கு வேட்டை நாய், புலி, சிறுத்தை, மான் என்று அவரவர்களுக்கு மனதில் தோன்றிய விலங்குகளின் பெயர்களையெல்லாம் எழுதியிருந்தார்கள்.  புத்திசாலியான பூமதி மட்டும் யோசித்து, யோசித்து வித்தியாசமான பதில்களை எழுதிப் பரிசைப் பெற்றாள். அப்படி என்ன பதில் எழுதிப் பரிசைப் பெற்றாள்?

5) நான்கு கண்கள்; ஆறு கால்கள் - தரையில் நிற்கவும் கண்டேன்; அது பறக்கவும் கண்டேன். அது என்ன?

6) ஒரு நாட்டில் ஒரு கொடுங்கோல் அரசன் ஆட்சி செய்து வந்தானாம். எடுத்ததற்கெல்லாம் கோபப்பட்டு மக்களை வாட்டி வதைப்பானாம். இப்படி இருக்கையில் ஒரு நாள் மன்னன் மாறு வேடம் போட்டு நகர்வலம் சென்றபோது, ஒரு நாய் அரசனை கடித்து விட்டதாம். கோபமடைந்த அரசன், நாயின் உரிமையாளனை அழைத்து, உன்னை நான் இதற்காக தண்டிக்ப் போகிறேன். எப்படி தெரியுமா? இப்பொழுது நீ இந்த நாயை நீ எப்படி கொல்கிறாயோ அப்படியே நானும் உன்னை கொல்லப் போகிறேன். என்றனாம். முதலில் நாயை கொல் என்று அரசன் கட்டளையிட்டான்.
நாயின் உரிமையாளன் சற்று யோசித்துப் பார்த்து, தான் எப்படியாவது உயிர் பிழைக்க வேணடுமே என நினைத்து புத்திசாலி தனமாக நாயை கொன்றான். அவன் கொன்ற முறையில் அரசன் அவனை தண்டிக்க முடியாமல் உரிமையாளனை  உயிரோடு விட்டு விட்டு சென்றானாம்.

அப்படியானால் நாயின் உரிமையாளன்  என்ன செய்து தண்டனையிலிருந்த தப்பிருக்க முடியும்?

7)எத்தனை கால்?
பூனைக்குப் பதினேழு கால் புள்ளினத்துக்கொன்பது கால்
யானைக்கும் பதினேழு கால் ஆகுமே
ஆட்டுக்குக் காலில்லை, மாட்டுக்குக் கொம்பில்லை
பாட்டுக்குள் ஆராய்ந்து பார்.

8)தமிழில் புலமைபெற்ற ஒரு முதியவர் தன் நண்பரான இன்னொரு புலவரிடம் கூறினாராம்:
"முக்காலைக் கையிலெடுத்து மூவிரண்டு போகையிலே
இக்காலை ஐந்துதலை நாகமொன்றழுந்தக் கடித்தது காண்?"
அதற்கு  இன்னொரு புலவர் கூறிய பதில்:
"பத்துரதன் புத்திரனின் சத்துருவின் பத்தினியின்
பெயரில் கால் நீக்கி அதில் தேய் "

9)வார்த்தை புதிர்
முற்பாதி போய்விட்டால் இருட்டே யாகும்
முன்னேழுத்து இல்லாவிட்டால் பெண்ணே யாம்
பிற்பாதி போய்விட்டால் ஏவற் சொல்லாம்
பிற்பாதியுடன் முன்எழுத்து இருந்தால் மேகம்
சொற்பாகக் கடைதலைசின் மிருகத்தீனி
தொடர் இரண்டாம் எழுத்துமா தத்தில் ஒன்று
அது என்ன வார்த்தை?

10)மேரியின் தந்தைக்கு மொத்தம் 5 மகள்கள் முறையே,
1. NANA
2. NENE
3. NINI
4. NONO
5வது மகளின் பெயர் என்ன ?

11)1
11
21
1211
111221
312211
13112221
1113213211
31131211131221
13211311123113112211
?

அடுத்த எண் என்னவாக இருக்கும் ?

12) மாட்டுக்கோன் தங்கை மதுரைவிட்டுத் தில்லைநகர்
ஆட்டுக்கோ னுக்குப்பெண்டு ஆயினாள்; கேட்டிலையோ?
குட்டி மறிக்கஒரு கோட்டானையும் பெற்றாள்
கட்டிமணிச் சிற்றிடைச்சி...இவள் யார்?

13) இப்பாடலைப் பாடியவர் இராமசாமிக் கவிராயர்.

முன்னொரு ஊரின் பேராம்;முன்னெழுத்து இல்லாவிட்டால்
நன்னகர் மன்னர் பேராம்;நடுஎழுத்து இல்லாவிட்டால்
கன்னமா மிருகத்தின் பேர்;கடைஎழுத் தில்லாவிட்டால்
உன்னிய தேனின் பேராம்;ஊரின் பேர் விளம்புவீரே!

கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.

14)இது ஒரு உணவுப் பொருள்.செடியில் இருந்து பறித்து, ப‌றித்த உடன் உண‌வுப்பொருளின் வெளியே இருப்பதை எல்லாம் உரித்து எறிந்துவிட்டு உள்ளே இருப்பதை சமைப்போம்.சமைத்ததில்,வெளியே இருப்பதை சாப்பிட்டுவிட்டு,உள்ளே இருப்பதை தூர எறிவோம்.இது என்ன உணவுப் பொருள்?
விடை :http://muhilneel.blogspot.com/p/blog-page_01.html



Source: eegarai.com,thamilworld.com,http://sagotharan.wordpress.com,http://akshayapaathram.blogspot.com

Wednesday, November 30, 2011

எண்ணிக்கை புதிர்

எண்கள் 1 முதல் 10 வரை - இவை குறிப்பாக, அந்த எண்ணிக்கைகளில் உள்ள சிறப்பானவற்றை குறிக்கும்.சொல்லும் பதில்கள் அனைத்தும் எண்ணிக்கைக்கு மேல் இருக்கக்கூடாது. உலகில் இன்னொன்றும் இருக்கக்கூடாது. எண்ணிக்கையும் குறையக் கூடாது. அவைகள் என்னென்ன?
எண்ணிக்கை   புதிர் - விடை 

Source: eegarai.com

Tuesday, November 29, 2011

K.Kamarajar History

Born - 15 July 1903
Died - 2 October 1975

Achievements - K. Kamaraj played a crucial role in the appointment of India's two Prime Ministers - Lal Bahadur Shastri in the year 1964 and Indira Gandhi in the year 1966. All throughout his reign as chief minister of Tamil Nadu, K. Kamaraj strived to provide free meals and education to people. This was for the first time in the world that a measure like this was being executed in 1957.

Kumaraswami Kamaraj, who is better remembered as K. Kamaraj, was a powerful Indian politician. He was regarded as the 'kingmaker' in Indian politics and was widely respected for his traits of honesty, integrity and simplicity. During the struggle for India's independence from the British rule, Kamaraj was a close friend of Pundit Jawaharlal Nehru, who was later appointed as the first prime minister of the country. Read this biography further to learn more about K. Kamaraj.

Kamaraj was called kingmaker because he played a crucial role in the appointment of India's two Prime Ministers - Lal Bahadur Shastri in the year 1964 and again Indira Gandhi in the year 1966. Thus, people fondly called him the Gandhi of South India or even the Black Gandhi. In his hometown Tamil Nadu, the denizens still credit him for spreading education facility to the thousands under the poverty line.

All throughout the reign of K. Kamaraj in Tamil Nadu, he strived to provide free meals and education to people. And this was for the first time in the world that a measure like this was being executed by K. Kamaraj in 1957. Due to his selfless service for the good of the poor and the downtrodden in the society, the Government of India awarded him with the Bharat Ratna, posthumously in the year 1976.

Though K. Kamaraj's nurtured an interest in politics since childhood, it was at the age of 16 that he joined the Indian National Congress as a full time worker. His task was to invite speakers, make arrangements for meetings and collect funds for the Congress party. In the year 1030, Kamaraj also participated in a rally to Vedaranyam spearheaded by C. Rajagopalachari as a part of the salt Satyagraha. There were many occasions when Kumaraswami Kamaraj was put behind the bars during the struggle for India's independence.

Monday, November 28, 2011

காமராஜரின் இதுவரை வெளிவராத அரிய புகைப்படங்கள்





காமராஜர் தன்னுடைய தங்கை மகன் திருமண விழாவில் பங்கேற்ற போது எடுத்த படங்கள். நாடார் திருமணங்களில் தாய்மாமன் சாஸ்திரம் என்று ஒரு சடங்கு செய்வார்கள், பெண்ணுடைய தாய்மாமனும் மாப்பிள்ளையுடைய தாய்மாமனும் இந்த சடங்கில் பங்கேற்பர். தன் தங்கை மகனுக்காக காமராஜர் தாய்மாமன் சடங்கில் பங்கெடுத்த போது எடுத்த படங்கள்.

காமராஜர் குடும்பத்தில் அதிக பற்று இல்லாதவர் என்ற கருத்து உள்ளது. ஆனால் அது உண்மை இல்லை. காமராஜர் சிறுவயதிலேயே விதவையான தன் தங்கையையும், தங்கையின் நான்கு பிள்ளைகளையும், தன் தாயையும் அவர் குறையின்றி பார்த்து கொண்டார். தன் கடமைகளை செவ்வனே நிறைவேற்றினார். தன் பதவியை தன் குடும்ப உறுப்பினர்கள் கூட தவறாக பயன்படுத்திவிட கூடாது என்ற உறுதியுடன் இருந்தார்.

Thanks, http://kamarajar.blogspot.com 

காமராஜ் கூறினார் " நீ கக்கூசுக்கு இடம் வாங்க வேண்டும் என்று சொல்கிறாய். ஊரில் உள்ளவன், நான் பங்களா வாங்கிவிட்டதாக சொல்லுவான



முன்னால் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி அவர்கள் தனது மகளுடன் காமராஜரின் விருதுநகர் வீட்டிற்கு வந்திருந்தபோது எடுத்த படம்- இந்த படத்தில் பின்னணியில் நீங்கள் காண்பது தான் காமராஜரின் விருக்துநகர் வீட்டின் உண்மையான தோற்றம் . ஆனால் இப்போது இந்த பழமையான தோற்றத்தை நீங்கள் அந்த வீட்டில் பார்க்க முடியாது. இப்போது அது வூட் பாலிஸ் செய்யப்பட்டு டைல்ஸ் பதிக்கப்பட்டு பகட்டாக தோற்றம் அளிக்கிறது.
இப்படி பல தலைவர்கள் வந்தாலும் அந்த வீட்டில் ஒரு மின்விசிறி கூட அப்போது கிடையாது. இந்த படத்தில் காமராஜருக்கும் சாஸ்திரி அவர்களின் மகளுக்கும் நடுவே நிற்பது காமராஜரின் தங்கை மகன் ஜவகர் மற்றும் அவரது மனைவி தங்கம்மாள் - அவர் கையில் இருப்பது ஜவகரின் முதல் குழ்ந்தை சுலோச்சனா. ஜவகர் அவர்களுக்கு மூன்றாவதாக ஒரு ஆண் குழ்ந்தை பிறந்த போது தான் சிவகாமி அம்மாள் அந்த வீட்டில் தன் பேரனுக்கு ஒரு மின்விசிறி கட்டாயம் வேண்டும் என்று முதன் முதலில் ஒரு மின்விசிறி மாட்டினார். மூன்றாவதாக பிறந்த அந்த பையனுக்கு காமராஜ் என்று பெயர் வைத்தனர். காமராஜ் என்ற பெயர் தமிழகம் முழுவதும் பலாயிரக்க்கணக்கில் எத்தனையோ குழந்தைகளுக்கு பெயர் வைக்கப்பட்டாலும் காமராஜர் குடும்பத்தில் இன்று வரை இரண்டு பேருக்கு மட்டும் தான் அந்த பெயர் வைக்கப்பட்டுள்ளது. அந்த உன்னதமான பெயரை குழந்தைக்கு வைத்து எப்படி அழைப்பது? மரியாதை குறைவாக இருக்கும் அல்லவா?
இந்த பதிவில் kamaraj101.blogspot.com தளத்தில் வெளியான ஒரு கட்டுரையை சேர்க்க விரும்புகிறேன்

///////////// காமராஜ் முதல்வராக இருந்தபோது அவரது அன்னையாருக்கு செலவுக்கு மாதம் ரூ.120 கொடுத்துக் கொண்டிருந்தார். அது போதவில்லை என்பதற்கு அன்னையார், முருக தனுஷ்கோடியிடம் ஒரு காரணத்தைக் கூறினார்.

" அய்யா முதல் மந்திரியாக இருப்பதால், என்னைப் பார்க்க யார் யாரோ வருகிறார்கள். வடநாட்டைச் சேர்ந்தவர்களும் வருகிறார்கள். அவர்களுக்கு ஒரு சோடா, கலர் கொடுக்காமல் எப்படி அனுப்புவது? ஆகையால், அய்யாவிடம் சொல்லி, மாதம் 150 ரூபாய் கிடைக்க ஏற்பாடு செய்தால் நல்லது" என்று கேட்டுக் கொண்டார். முருக தனுஷ்கோடி சென்னை வந்ததும் காமராஜிடம் சொன்னார். ஆனால் அவரோ 120 ரூபாய்க்கு மேல் கொடுக்க மறுத்துவிட்டார். " யார் யாரோ வருவார்கள். உண்மைதான். அவர்கள் சோடா, கலர் கேட்கிறார்களா? அவர்களுக்கு ஒன்றும் கொடுக்க வேண்டாம். தவிர கையில் கொஞ்சம் ரூபாய் சேந்தால் அம்மா எங்காவது கோவில், குளம் என்று போய் விடுவார்கள். வயதான காலத்தில் வெளியூர் போவது நல்லதல்ல. எனவே இப்போது கொடுத்துவரும் 120 ரூபாயே போது" என்று சொல்லிவிட்டார்.

அதேபோல், அன்னையார் தமது மகள் நாகம்மாளின் மகன் ஜகவருக்குத் திருமணம் செய்ய வேண்டும் என்றும் வீட்டில் கக்கூஸ் அமைக்க பக்கத்தில் ஒரு இடம் ரூ.3000 த்துக்கு வாங்க வேண்டும் என்றும் முருக தனுஸ்கோடியிடம் கூறினார்.

ஒரு முதலமைச்சரின் வீட்டில் இந்த வசதி கூட இல்லாவிட்டால் எப்படி?

இதில் உள்ள நியாயத்தை உணர்ந்த தனுஷ்கோடி, காமராஜை சந்தித்துக் கூறினார். உடனே காமராஜ் " நீ கக்கூசுக்கு இடம் வாங்க வேண்டும் என்று சொல்கிறாய். ஊரில் உள்ளவன், நான் பங்களா வாங்கிவிட்டதாக சொல்லுவான். சிலர் பத்திரிக்கையில்கூட எழுதுவார்கள். அதெல்லாம் வேண்டாம். நீ போ" என்று கோபமாக பேசி அனுப்பினார்.


அவர் வகித்த முதலமைச்சர் பதவி, அவரது வாழ்க்கை நிலையில் எந்த மாற்றத்தையும் எற்படுத்த அனுமதித்ததில்லை.\\\\\\\\\\\\\\\\\


Source : http://kamarajar.blogspot.com/2007/12/blog-post.html

Monday, November 21, 2011

புதிர்-1

1) அண்ணாச்சிக்கு மூன்று மகன்கள். அவருக்கு நெல்லையில் சொத்தாக சொந்தமாக 17 வீடுகள். அவருடைய உயிலில் சொத்தில் மூத்த மகனுக்கு 1 /2 பங்கும், இரண்டாவது மகனுக்கு 1 /3 பங்கும் மற்றும் மூன்றாவது மகனுக்கு
1 /9 பங்கும் கொடுப்பதாக எழுதி வைத்தார். முழு வீடுகளாக வேறு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ஒரு நிபந்தனை. மகன்களுக்கு ஒரே குழப்பம். அப்பாவிற்கு இருந்த கணித அறிவு நமக்கு இல்லையே என்று.உங்களைக் கூப்பிட்டு இந்த பிரச்சனையைத் தீர்க்கச் சொன்னால் எப்படி தீர்த்து வைப்பீர்கள்?

2) ஒரு விடுதியில் சில அறைகள் இருந்தன.பயணிகள் சிலர் அறைக்கு ஒருவர் வீதம் தங்க 6 பயணிகள் மீதம் இருந்தனர்.அறைக்கு இருவர் வீதம் தங்க 4 அறைகள் மீதம் இருந்தன.என்றால் அறைகள் எத்தனை, பயணிகள் எத்தனை?

3) வரிசையாக இருந்த ஐந்து கூடைகளில் முதல் கூடையில் சில பழங்கள் இருந்தன.இரண்டாம் கூடையில் முதலாவதை விட ஆறு பழங்கள் அதிகமாக இருந்தன.மூன்றாம் கூடையில் இரண்டாவதை விட ஆறு பழங்கள் அதிகமாக இருந்தன.நான்காம் கூடையில் மூன்றாம் கூடையை விட ஆறு பழங்கள் அதிகமாக இருந்தன.ஐந்தாவது கூடையிலும் நான்காவது கூடையைவிட ஆறு பழங்கள் அதிகமாக இருந்தன.மொத்த பழங்களின் எண்ணிக்கை நூறு என்றால் ஒவ்வொரு கூடைகளிலும் எவ்வளவு பழங்கள் இருந்தன?

4) ஒரு மனிதனால்தான் உருவாக்கப்படுகிறது...ஆனால் எந்த மனிதனுக்கும் அதில் விருப்பமில்லை.
ஒரு மனிதனால்தான் அது வாங்கப்படுகிறது. ....ஆனால் அது அவனுக்குத் தேவையில்லை.
ஒரு மனிதனுக்கு அது தேவை...ஆனால் அதை வாங்கியது அவனுக்குத் தெரியாது.
அது என்ன???? 

5) ஐந்து அடுக்கு நான்கு இடுக்கு அது என்ன?


6) ஒருவருக்கு இரட்டை குழந்தைகள் ...அவர்கள் இருவரும் இரட்டை பிறவிகள் ..அவர்களில் இளையவன் மூத்தவனை விட இரண்டு நாட்கள் முன்னரே பிறந்த நாள் கொண்டாடுகிறான் ..அது எப்படி ?


7) இந்த பூமியில் Today என்பது எப்போதும் Yesterday க்கு பின்னர்தான் வரும். ஆனால் ஒரு இடத்தில் மட்டும் Today க்கு பின்னர் Yesterday வரும். அது எங்கே?


8) ஒரு கடிகாரத்தில் ஆறு மணிக்கு ஆறு முறை மணி அடிக்கும்போது முதல் மணிக்கும் கடைசி மணிக்கும் உள்ள இடைவெளி 30 வினாடிகள் எனில், 12 மணிக்கு எத்தனை நேரம் மணி அடிக்கும் அந்த கடிகாரத்தில் ?



விடை 

Article

பூக்களின் பருவம்

பூக்களின் ஒவ்வொரு பருவத்திற்கும் தமிழில் ஒரு பெயர் இருக்கிறது.
மொக்கு ---முகப்பு காட்டும் நிலை
மொட்டு ----மூட்டும் இறுக்க நிலை
அரும்பு ----அரும்பும் சூழ்நிலை
முகிழ் ----முகிழ்த்து வரும் நிலை
மூகை ----மணம் முகம் காட்டும் நிலை
மலர் ----மலர்ந்து மணம் கமழும் நிலை
அலர் ----மிக நன்கு மலர்ந்த நிலை.
வீ ----வீழும் நிலைப்பூ.
செம்மல் ----வாடி வதங்கிய நிலை.

Tuesday, November 15, 2011

தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டமைக்கான காரணங்கள்.

தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டமைக்கான காரணங்கள். செம்மொழிக்குரிய அனைத்து 11 தகுதிகளையும் தன்னகத்தே கொண்ட மொழி தமிழ் மொழி ஒன்றே.தொன்மை,முன்மை, நுண்மை, திண்மை, எண்மை, ஒண்மை, இனிமை, தனிமை, இளமை, வளமை, தாய்மை, தூய்மை, மும்மை, செம்மை, இயன்மை, வியன்மை ‍என பதினாறு செவ்வியல் தன்மைகளைக் கொண்டது நம் தமிழ்மொழி ஒன்றே!
1)தொன்மை (Antiquity)
2)தனித்தன்மை (Individuality)
3)பொதுமைப் பண்பு  (Common Characters)
4)நடுவு நிலைமை (Neutrality)
5)தாய்மைத் தன்மை (Parental Kinship)
6)பண்பாடு,கலை,பட்டறிவு வெளிப்பாடு (Finding expression  in the culture,art and life experience of the civilized society)
7)பிறமொழிக் கலப்பில்லாத தனித்தன்மை.(Ability  to function independently  without any impact or influence of  any other language and literature)
8)இலக்கிய வளம் (Literary Powers)
9)உயர்சிந்தனை (Noble Ideas and Ideals)
10)கலை,இலக்கியத் தன்மை வெளிப்பாடு (Originality in artistic and literary expressions)
11)மொழிக் கோட்பாடு (Linguistic Principles)


Monday, November 14, 2011

முட்டையில் இருந்து கோழி வந்ததா? அல்லது கோழியில் இருந்து முட்டை வந்ததா?

முட்டையில் இருந்து கோழி வந்ததா? அல்லது கோழியில் இருந்து முட்டை வந்ததா? என்ற கேள்விக்கு நீண்ட நாட்களாக பதில் அளிக்க முடியாமல் இருந்த நிலையில், தற்போது கோழியில் இருந்துதான் முட்டை வந்ததாக விஞ்ஞானிகள் கண்டு பிடித்து உள்ளனர்.

இங்கிலாந்தில் உள்ள ஷெப்பீல்டு, வார்விக் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இதுபற்றி ஆய்வு நடத்தினார்கள்

முட்டையின் செல்களை சூப்பர் கம்ப்யூட்டர் மூலம் ஆய்வு செய்ததில் முட்டையின் செல்கள் வோக்லெடின்-17 (ovocleidin-17) என்ற புரோட்டின் மூலம் உருவாகி இருந்தது.இந்த வோக்லெடின்-17 செல் கோழியின் உடலில் இருப்பதாகும்.அதுதான் முட்டையாக மாறி இருக்கிறது.

வோக்லெடின்-17 புரோட்டின், கிறிஸ்டல், நியூகிளீசாக மாறி தானாக வளர்ச்சி பெற்று முட்டை செல்களாக மாறுவது இதன் மூலம் கண்டு பிடிக்கப்பட்டது.

எனவே கோழியில் இருந்துதான் முட்டை வந்துள்ளது என்று அடித்துக்கூறுகின்றனர் அந்த விஞ்ஞானிகள்!
Source:http://askintamil.com/?p=1941

           It's the age-old question that has puzzled the finest minds for thousands of years – which came first: The chicken or the egg?Now, scientists claim to have finally discovered the answer to the conundrum -- it's the chicken which came first.
         A team from University of Sheffield and University of Warwick has found that a protein called ovocleidin (OC-17) is crucial in the formation of eggshells.It is produced in the pregnant hen's ovaries so the correct reply to the egg riddle must be that the chicken came first, the scientists say.
         However, the research does not come up with how the protein-producing chicken existed in the first place, the 'Daily Express' reported.The team used a hi-tech computer, called HECToR, to look at the molecular structure of a shell.They discovered that OC-17 acts as a catalyst, kick- starting the conversion of calcium carbonate in the chicken's body into calcite crystals.



           It is these that make up the hard shell that houses the yolk and its protective fluids while the chick develops.
Lead scientist Dr Colin Freeman of Sheffield University said: "It had long been suspected that the egg came first but now we have the scientific proof that shows that in fact the chicken came first."The protein had been identified before and it was linked to egg formation but by examining it closely we have been able to see how it controls the process. It's very interesting to find that different types of avian species seem to have a variation of the protein that does the same job."
            The scientists now hope the breakthrough could be used in industry to help develop new materials.
Team member Prof John Harding said: "Nature has found innovative solutions that work for all kinds of problems in materials science and technology. We learn a lot from them."
             Calcite crystals are found in numerous bones and shells but chickens form them quicker than any other species, creating six grams (0.2oz) of shell every 24 hours. Once the shell has formed, the chicken expels the egg.
Source:http://www.indianexpress.com/news/its-official-chicken-came-before-the-egg

மணக்கோலம் காணும் மணமேடையில் மறைந்துள்ள ரகசியங்கள் தெரியுமா?


மணக்கோலம் காணும் மணமக்கள், மணமேடையில் தாலிகட்டிக் கொள்வர். அந்த மணமேடை தத்துவார்த்த ரீதியாக அமைக்கப்பட்டிருப்பது பலருக்கும் தெரியாது. தாலி கட்டி முடிந்ததும் மணமேடையை மூன்று முறை வலம் வரச் சொல்வது வழக்கம். ஆலயத்தை வலம் வருவது போல மணப்பந்தலை வலம்வர காரணம் மணப்பந்தலில் அமைக்கப்பட்டிருக்கும் பொருட்கள் யாவும் தெய்வ வடிவங்களாகும். பந்தலில் ஊன்றப் பட்டிருக்கும் நான்கு கால்களும், நான்கு வேதங்களைக் குறிக்கின்றன. திருமணம் விக்னேஷ்வரர் சாட்சியாகவும், அக்னிசாட்சியாகவும் நடைபெறுகிறது. அரசன் ஆணைக்கால் என்று அரசானிக்கால் வைக்கப்படுகிறது. குபேரனுக்குரிய நவதானியமும் வைக்கப்பட்டுள்ளது. மணப்பந்தலை வலம் வரும் பொழுது தெய்வத்தை, திருவிளக்கை, அக்னியை, மரத்தை வலம் வந்து, அவற்றின் அருளையும் பெறுகின்றோம்.

Sunday, November 13, 2011

VYMANIKA SHASTRA

Ancient Indians possessed a highly advanced knowledge of Aeronautics, which is comparable to modern day technology, sometimes even far advanced!!

VYMANIKA SHASTRA

VYMANIKA SHASTRA, a 4th century work discovered in a temple in 1875, describes 31 essential parts of the Vimana. It has also gives 16 types of metals needed to build a Vimana out which only 3 are known to us. It mentions technologies like solar power and anti gravity. In this sastra, Maharishi Bhardwaja refers to about seventy authorities and 10 experts of air travel of ancient times, which means this technology is older than 4th century BC!!!

In YANTRA SARVASA, sage MAHARISHI BHARDWAJA describes "Vimana's" as being classified into 3 classes:
1. Those travel from place to place
2. Those travel from country to country
3. Those travel from planet to planet

They are also classified into four categories based on their appearance as follows:
1. Rukma - conical in shape
2. Sundara - rocket like
3. Tripura - three storied
4. Sakuna - bird like (similar to modern day planes)

There were 113 subdivisions of these four types with minor changes.

The construction details of the planes were given in SAMARANGA SUTRADHARA. It has 230 stanzas devoted to the principles of building Vimana's and their use in war and peace.

AMARANGANA SUTRADHARA has explanations about the drive, controls and fuel for the Vimana. Ten sections deal with themes such as pilot training, flight paths, indiviudal parts of the machine, clothing for pilots and passengers, and the food recommended for long flights. The metals used were classified under three categories
1. Somala
2. Soundaalika
3. Mourthwika
if they are mixed in right proportions, 16 metals will be obtained with heat absorbing capabilities and they were Ushnambhara, Ushnapaa, Raajamlatrit etc.

The weapon technology described resemble weapon technologies of modern times. Ancient Indians used weapons like Soposamhara (flame belching missile), Prasvapna (which caused sleep) and four kinds of Agni Astras that traveled in sheets of flame and produced thunder. Marika seems to be similar to Laser technology.

According to RAHASYAGNUODHIKAAREE, "The pilot is one who knows the secrets". there were 32 secrets a pilot must know. Only such a person shall be entrusted with a Vimana. Those secrets are given in RAHASHYA LAHARI. Some of them are Goodha, Drishya, Vimukha, Roopaakarshana, Stabdhak, Chaapla, Parashabda Graahaka.

According to SHOWNAKA, the regions of the sky are
1. Rekhaapthaha
2. Mandala
3. Kakshaya
4. Shakti
5. Kendra

In these 5 atmospheric regions, there were 5,19,800 air ways traversed by the Vimana's of Seven Lokas:
1. Bhooloka
2. Bhuvarloka
3. Suvarloka
4. Maholoka
5. Janoloka
6. tapoloka
7. Satyaloka

It also discusses food to be eaten, clothing to wear, metals for Vimana's, purification of metals, mirror and lenses installed in the Vimana's, mechanical contrivances or yantras.


Experiments:

1. A glass-like element which was developed by a scholar of Benaras Hindu University based on the technology of ancient Sanskrit text has proved to be a material which cant be detected by RADAR.

2. In 1835, an Indian Sanskrit scholar Shivkar Bapuji Talpade developed a Vimana based on Vedic technology Marutsakthi and demostrated in Chowpathy beach of Bombay when it flew to about 1500 feet before it crashed!!


Historical evidences also prove the ancient India's aeronautical intelligence.

1.When Alexander the Great invaded India, 2000 years ago, his scribes chronicled an attack by 'flying fiery shields' that panicked their horses.

2. Hitler sent his men to Ancient India to gather information about this technology

3. King Ashoka, after turning into a Buddhist, a Secret Soceity of 'Nine Unknown Men. They were grea Indian scientist of hat time who were supposed to catalogue the sciences. He kept their work secret fearing that it might be used for destructive purposes. Each one of them is believe to have written a book. The first one, 'The Secrets of Gravitation' deals with gravity control!!

They seemed to have used solar power and anti gravity for operating the Vimana's!!

Source:http://www.crystalinks.com/ancientaircraft.html








Spices,Vegetables & Fruits Tamil Translation

ஜாதிக்காய் - Nutmeg
ஜாதிபத்திரி - Mace
இஞ்சி - Ginger
சுக்கு - Dry Ginger
பூண்டு - Garlic 
குடை மிளகாய் - Capsicum
ஏலக்காய்/ஏலம் - Cardamom
பாதாம் பருப்பு/வாதுமை கொட்டை - Almonds
முந்திரி பருப்பு/அண்டிப்பருப்பு - Cashew nuts
கிஸ்மிஸ் - Dry Grapes
லவங்கப்பட்டை  - Cinnamon
கிராம்பு - Cloves
கசகசா - Poppy 
உளுந்து - Black Gram 
கடலைப் பருப்பு - Bengal Gram 
பச்சைப்பயறு/பயித்தம் பருப்பு / பாசிப் பயறு - Moong Dhal/ Green Gram
பாசிப்பருப்பு - Moong Dal
கடலைப்பருப்பு - Gram Dal
உளுத்தம் பருப்பு - Urid Dhal
துவரம் பருப்பு - Red gram / Toor dhal
 கம்பு - Millet
கேழ்வரகு - Ragi
கொள்ளு - Horse Gram
கோதுமை - Wheat 
கோதுமை ரவை - Cracked Wheat
சோளம் - Corn
சோளப்பொறி - Popcorn
எள்ளு - Sesame seeds / Gingelly seeds
நெல் - Paddy 
அரிசி - Rice 
அவல் - Rice flakes
பச்சை அரிசி - Raw Rice
புளுங்கல் அரிசி - Par boiled rice
கடலை மா - Gram Flour
மக்காச்சோளம் - Maize
வாற்கோதுமை - Barley
சேமியா - Vermicelli
சவ்வரிசி - Sago
ரவை - Semolina
கொண்டை/கொண்டல் கடலை - Chickpeas/Channa
கடுகு - Mustard
சீரகம் - Cumin
வெந்தயம் - Fenugreek
சோம்பு,பெருஞ்சீரகம் - Fennel seeds
பெருங்காயம் - Asafoetida
மஞ்சள் - Turmeric 
ஓமம் - Ajwain / Ajowan,Thymol seeds
தனியா - Coriander
கொத்தமல்லி தழை - Coriander Leaf 
கறிவேப்பிலை - Curry Leaves
கஸ்தூரி - Musk 
குங்குமப்பூ - Saffron
பன்னீர் - Rose Water 
துளசி - Tulsi
எலுமிச்சை துளசி - Basil
எண்ணெய் - Oil 
கடலை எண்ணெய் - Gram Oil
தேங்காய் எண்ணெய் - Coconut Oil
நல்லெண்ணெய் - Gingili Oil/Sesame oil
வேப்ப எண்ணெய் - Neem Oil 
பாமாயில் - Palm Oil
ஆலிவ் ஆயில் - Olive Oil
பால் - Milk 
பால்கட்டி - Cheese
நெய் - Ghee 
வெண்ணெய் - Butter
தயிர் - Curd/Yoghurt 
மோர் - Butter Milk 
கீரை - Spinach 
கர்பூரவள்ளி - Oregano
நார்த்தங்காய் - Citron
திருநீர்பச்சை - Ocimum-basilicum
சீத்தாப்பழம் - Custard-apple
மாதுளை - Pomegranate
பரங்கிக்காய்/பூசணிக்காய்  - Pumpkin  
அதிமதுரம்-Liquorice
அருகம்புல் - Bermuda Grass
வல்லாரை கீரை - Pennywort (Centella asiatica)
புதினா இலை - Mint leaves
வெற்றிலை - Betel leaves
அத்தி - Fig
நெல்லிக்காய் - Amla,Indian Gooseberries
சுண்டைக்காய் - Solanum torvum(Turkey Berry)
அன்னாசிப் பூ - Star Anise
பதநீர்/பயினி - Neera /Palmyra juice
கத்தரிக்காய் - Egg plant / Aubergine / Brinjal
கருப்பு எள் - Nigella Seeds
பிரிஞ்சி இலை - Bay leaf
வெள்ளைப் பூசணிக்காய் - Ash Gourd
சுரைக்காய் - Bottle Gourd
அவரைக்காய்  - Broad Beans
கொத்தவரங்காய் - Cluster Beans
நூல் கோல்-Kohlrabi (German turnip)
கருணை கிழங்கு - Elephant yam
கல்பாசி - Black Stone Flower
பசலை கீரை  - Spinach
வெந்தய கீரை - Fenugreek leaves
முளைக் கீரை -Amaranth spined 
 அகத்திக் கீரை - Agathi leaves
தண்டுக் கீரை - Amaranth
புளிச்ச கீரை - Sorrel leaves
மாங்காய் பொடி-amchur (dried and powdered unripe mango) 
அவுரி நெல்லி - Blueberry 
கத்தரிக்காய் - egg plant
பீர்க்கங்காய் - chinese okra
குடை மிளகாய் - Bell pepper
அவரைக்காய் - hyacinth beans
கொத்தவரங்காய் - Cluster beans
சேப்பங்கிழங்கு - Colacassia
முலாம் பழம் - Melon musk (Cantaloupe)
கோவக்காய் - Ivy Gourd (Tindora in Hindi)
சேனைக்கிழங்கு - elephant Yam
கருணைக்கிழங்கு - Yam Ordinary
சர்க்கரைவள்ளிக் கிழங்கு -Sweet Potato
மரவள்ளிக் கிழங்கு - Tapioca
சிறு கிழங்கு,கூர்க்கன் கிழங்கு -  Livingstone potato, wild potato, country potato, Hausa potato, Madagascar potato, coleus potato, Sudan potato, scrambled eggs, Zulu round potato (S. rotundifolius), elongated native potato, Swedish begonia
மங்குஸ்தான் பழம் - Mangosteen fruit
பொன்னாங்கண்ணிக் கீரை - Sessile Joyweed, Dwarf Copperleaf
கல்யாணப் பூசணி - White Pumpkin
கஸ்தூரி மஞ்சள் - Round Zeodary
விலாம் பழம் - Wood Apple
சுரைக்காய் - bottle gourd
கடுக்காய்- Ink nut, Chebulie
தட்டைப் பயிறு - flat bean
காராமணி - cow bean
இலந்தை - Jujuba fruit
அரத்திப்பழம் , குமளிப்பழம் - apple
கமலாப்பழம் , நாரத்தை, நாரத்தம் , கிச்சிலி , நாரதம்பழம்  , தோடம்பழம் .- orange
செம்புற்றுப்பழம் .- strawberry
முள்நாரிப்பழம் -durian  குமட்டிப்பழம் , தர்பூசணி , முலாம்பழம் .-watermelon
குருதிநெல்லி -cranberry
குழிப்பேரி - peach
சேலாப்பழம் .-cherry
பசலிப்பழம் -kiwi

  
Source: www.eegarai.com

Thanks,My Friend - Mrs.Aarthy Vijay ourownkitchen.blogspot.com
http://www.spiceindiaonline.com
http://www.tamilcube.com/res/indian_herbs.html
http://en.wikipedia.org/wiki/User:Na%C5%8Bar/Koorka

விடுகதைகள்-3

1)ஒன்றும் இரண்டும் சேரில் செல்வம்
மூன்றும் நான்கும் சேரில் குளம்
மூன்றும் ஐந்தும் ஒன்றும் சேரில் கங்கை
மூன்றும் ஆறும் சேரில் பெருமை
ஏழும் எட்டும் சேரில் பருகு அஃது என்ன?
2)சிவப்பு பைக்குள் சில்லறை கொட்டிக் கிடக்குது? அது என்ன?
3)ஆயிரம் தச்சர் கூடி, அழகான மண்டபம் கட்டி, ஒருவன் கண்பட்டு, உடைந்ததாம் மண்டபம். அது என்ன?
4)ஒத்த கால் குள்ளனுக்கு எட்டு கைகள்.அவன் யார்?
5)பூ பூப்பது கண்ணுக்குத் தெரியும். காய் காய்ப்பது கண்ணுக்குத் தெரியாது. அது என்ன?
6)குதிரை ஓட ஓட வால் குறையும்.அது என்ன?
7 )பூக்கும்,காய்க்கும்,வெடிக்கும். ஆனால் பழுக்க மட்டும் செய்யாது.அது என்ன?
8 )தொப்பைப் பையனுக்கு ஒரு வாசல். தோழனுக்கு இரண்டு வாசல்.அவன் யார்?
9 ) அடிப்பக்கம் மத்தளம்,இலை பர்வதம், குலை பெரிது,காய் துவர்ப்பு,கனி தித்திப்பு - அது என்ன?
10 )ஒருவனுக்கு உணவளித்தால் ஊரையே கூட்டுவான்.அவன் யார்?   
11)இடி இடிக்கும், மின்னல் மின்னும்,ஆனால் மழை பெய்யாது.- அது என்ன?
12 )ஆயிரம் பேர் அணிவகுத்தாலும் ஆரவாரம் இராது.அவர்கள் யார்?
13 )எத்தனை தரம் சுற்றினாலும் தலை சுற்றாது.அது என்ன?
14 ) குடிக்க உதவாத நீர் , குளத்தில் தங்காத நீர் , தொடமுடியாத நீர் ,கண்களுக்கு மட்டுமே தெரியும் நீர் .அது என்ன?
15 ) காலில் தண்ணீர் குடிப்பான்.தலையில் முட்டையிடுவான். அவன் யார்? 
16) நீருக்குள் இருக்கும்; மீனும் அல்ல. வெளியில் வந்தால் எரியும்; நெருப்பும் அல்ல அது என்ன?
17) ஊர்ந்து தவழ்ந்து அலையும், ஊழியந்தனில் உயரும், கூர்ந்து நகர்ந்து எங்கும் கூடி இரையைச் சேர்க்கும், கண்ணில்லாச் சிறிய உயிர். அது என்ன?
18) பனி ஊரில் பிறந்த பழம், பார்க்கச் சிவப்புப் பழம், தினம் ஒன்று சாப்பிட்டால் மருத்துவரை விரட்டும் பழம். அது என்ன?
19) முட்டையிடும் குஞ்சு பொரிக்காது, கூட்டில் குடியிருக்கும், கூடு கட்டத் தெரியாது. குரலில் இனிமையுண்டு, சங்கீதம் தெரியாது. அது என்ன?
20) எட்டெழுத்து ஊர் அதுவாம், யார்க்கும் தெரிந்த ஊர் அதுவாம், முதலும் இரண்டும் அழகாகும். மூன்றும் நான்கும் பதிலாகும். அய்ந்தும் ஆறும் மருந்தாகும். ஏழும் எட்டும் அடிமரமாம். அந்த ஊர் எந்த ஊர்?
21) சேலை  ஊடுத்தியிருக்கும் பெண்ணல்ல; அதனுள்ளே முத்து இருக்கும்; சிப்பியல்ல, தாடியுண்டு கிழவனல்ல மக்களுக்கு உணவாகும். அது என்ன?
22) உச்சியில் பூவிருக்கும் ஊருணிக் கரையிலிருக்கும் வெள்ளம் புரண்டு வந்தாலும் அவரை வீழ்த்த முடியாது. அது என்ன?
23) பக்கமெல்லாம் முள்ளிருக்கும் பலாக்காயல்ல. உள்ளே வெளுத்திருக்கும் தேங்காயல்ல. உருக்கினால் நெய்வடியும் வெண்ணெய் அல்ல. அது என்ன?
24)கடல் நீரில் பிறந்தானாம் வெள்ளையப்பன்.மழை நீரில் மறைந்தானாம்
வெள்ளையப்பன்......அவன் யார்
?
25)உயர்ந்த இடத்தில் பிறந்தானாம் ஒரு ஜாணு மனுஷன்,ஒரு ஜாணு மனுஷனுக்கு அரை ஜாணு குடுமி...............அவன் யார்?
26)மூடித் திறக்கும் பெட்டி முத்திருக்கும் பெட்டி பாட்டுப் பாடும் பெட்டி
பாம்பிருக்கும் பெட்டி...............அது என்ன பெட்டி?
27)காகிதத்தைப் பார்த்தாலே குட்டியக்கா கண்ணீரு வுடுவாளே குட்டியக்கா
முக்காடு போட்டிருப்பா குட்டியக்கா சொருக குச்சி வச்சிருப்பா குட்டியக்கா......அவள் யார்?
28)மரம் போல வளர்ந்திருக்கும்  வேர் இருக்காது  கிளையிருக்கும் கிளைதனிலே இலை இருக்காது..................அது என்ன?
29) மஞசள் போர்வைக்குள் வெள்ளையப்பன்.அது யார்?
30) பகிர்ந்து உண்ணும் கருத்தம்மா ஆகாயத்தோட்டியும் நான் தானே?
31)உப்புத் தண்ணியோடு உருளுது ஒரு பந்து.அது என்ன?
32)கோயிலைச் சுற்றி கருப்பு! கோயிலுக்குள் வெளுப்பு! அது என்ன?
33)யாரும் விரும்பாத மீசைக்காரனுக்கு எங்கு சென்றாலும் அடி உதை அவன் யார்?
34)அண்ணனின் தயவால் ஆட்சி செய்து கொண்டிருக்கும் அழகான தம்பி அவன் யார்?
35)சிவப்புப் பெட்டிக்குள் சிறிய பெரிய செய்திகள் அது என்ன?
36) சித்திரையில் சிறு பிள்ளை வைகாசியில் வளரும் பிள்ளை ஆனியில் அழகுப்பிள்ளை ஆடியில் விழும் பிள்ளை!-அது என்ன?  
37) உங்கள் அக்கா குளித்ததும் கருப்பு. எங்கள் அக்கா
குளிக்காமல் சிகப்பு. அது என்ன?
38) அள்ள அள்ள பெரிதாகும். அது என்ன?
39) துடித்து இடி இடிக்கும். சடசடவென்று படபடக்கும்.
அது என்ன?
40) இரட்டைக் கிளவியில் ஒற்றை ஓணான் .அது என்ன?
41) எங்க அக்கா குள்ளக்கா...எது வைத்தாலும் தாங்கும்க்கா..
அது என்ன?
42) பச்சை பச்சை டாக்டர், பால் பால் டாக்டர், குண்டு குண்டு
டாக்டர், குதிரை வால் டாக்டர்..அது என்ன?
43) ஆழக் குழி தோண்டி அதிலே ஓர் முட்டை இட்டு
அண்ணாந்து பார்த்தால் தொண்ணூறு முட்டை..அது என்ன?
44) ஏணி, ஏணி மேலே கோணி, கோணி மேலே குண்டு,
குண்டு மேலே புல்லு, அது என்ன?

45) பையில் இது இருந்தால் வேறு எதுவும் இருக்காது - அது என்ன?
46) நூறு கிளிக்கு ஒரே வாய் - அது என்ன?
47) பயந்தால் விட மாட்டான். பழகினால் மறக்க மாட்டான்
அது என்ன?
48) உச்சிக்கிளையில் சாட்டை தொங்குது - அது என்ன?
49) ஊசி மூக்கன், உள்ளங்கை கட்டையன் , ஊருக்கு
செல்லப்பிள்ளை - அது என்ன?
50) வாசலில் பூத்திருக்கும் வாழ்வரசி - அவள் யார்?
51) பிடிக்கவே முடியாத கள்வன் அவன் யார்?
52) பூவில் பிறக்கும், நாவில் சுவைக்கும் - அது என்ன?
53) மொட்டைப் பாறையில் மூடிய கண்கள் மூன்று - அது என்ன?
54) கொடுக்க முடியும், எடுக்க முடியாது - அது என்ன?
55) அண்ணன் தம்பி சேராவிட்டால் ஊருக்கெல்லாம்
கொண்டாட்டம் - அது என்ன?
56) சிவப்புப் பெட்டிக்குள் சில்லறை கொட்டிக் கிடக்குது -
அது என்ன?
57) மூன்று கண்கள் இருக்கும், இவனால் பார்க்க முடியாது -
அது என்ன?
58) நெருப்பு பட்டால் அழுவான் - அவன் யார்?     
59) அடியில் உள்ளவன் அடக்கமாயிருப்பான் மேலே உள்ளவன் நறுக்கென்று கடிப்பான் - அவன் யார் ?

60) ராத்திரி பிறந்த பையன் தலைப்பாகையுடன் பிறந்தான் -அவன் யார் ?
61) விழுந்தால் படுக்காது அழந்தால் நிற்காது - அது என்ன ?
62) ஆகாயத்தில் காற்றுக்கு ஆடும் அரிவாள்கள் - அது என்ன ?
63) நான் ஏறும் குதிரை நாலு கால் குதிரை ,அந்த குதிரைக்கு ஆயிரம் கண்கள் - அது என்ன?
64) வேகமாய் போகிற அம்மணிக்கு விழுந்த கைக்குட்டையை எடுக்க நேரமில்லை - அது என்ன ?
65) நாளெல்லாம் நடந்தால் கூட நான்கடி செல்லாத நாயகன் அவனுக்கோ உடல் முழுக்க கவசம் வேறு - அது என்ன ?
66) ஆற்றோரம் பிறந்து அழகழகாய் விரிந்து சந்தைக்கு வந்து மாமன் வாங்கிபோனால் மங்கை நல்லாள் சிரிப்பாள் - அவள் யார் ? 
67) குதி குதியெனக் குதிக்கிறான், கொட்டைப்
பல்லால் சிரிக்கிறான் - அது என்ன?
68) குழந்தைக்கு எந்தக் கை பலமான கை?
69) குட்டியும் போடும், குவலயத்திலும் பறக்கும் - அது என்ன?
70) குட்டைப் பெண்ணுக்கு எட்டு முழச்சேலை - அது என்ன?
71) குடுக்கை நிறைய வைரமணி - அது என்ன?

விடைகள்:http://muhilneel.blogspot.com/p/3.html 


Source:http://www.palakani.com
           http://ta.wikipedia.org/விடுகதை 
           http://thentamil.darkbb.com 
           http://www.periyarpinju.com 
           http://eegarai.net 
           hhtp:// www.tamilthottam.in

Saturday, November 12, 2011

இந்தியாவின் முதல் பெண்கள்

  • இந்தியாவின் முதல் பெண்  பிரதமர்-இந்திரா காந்தி
  • இந்தியாவின் முதல் பெண் முதலமைச்சர்-சுசேதா கிருபளானி (உத்திரபிரதேசம்)
  • இந்தியாவின் முதல் பெண் ஆளுநர்-சரோஜினி நாயுடு (உத்திரபிரதேசம்)
  • இந்தியாவின் முதல் பெண் உச்சநீதிமன்ற நீதிபதி- பாத்திமா பீவி
  • இந்தியாவின் முதல் பெண் மாநில ‌தலைமை செயலர்-லட்சுமி பிரானேஷ்
  • இந்தியாவின் முதல் பெண் வெளிநாட்டு தூதர்-விஜயலட்சுமி பண்டிட் (ரஷ்யா 1947-49)
  • இந்தியாவின் முதல் பெண் காபினெட் அமைச்சர்-ராஜ்குமாரி அம்ரித்கௌர் (சுகாதாரத்தூறை 1957 வரை)
  • இந்தியாவின் முதல் பெண் ‌வழக்கறிஞர்-ரெஜினா குகா (1922)
  • இந்தியாவின் முதல் பெண் ‌மருத்துவர்-ஆனந்தபாய் ஜோஷி (அமெரிக்காவில் பட்டம் பெற்றார்)
  • இந்தியாவின் முதல் பெண் பொறியாலர்-லலிதா (சிவில் 1950)
  • இந்தியாவின் முதல் பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி-அன்னா ஜார்ஜ் மல்கோத்ரா (1950)
  • இந்தியாவின் முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி-கிரண்பேடி
  • இந்தியாவின் முதல் பெண் நீதிபதி-அன்னா சாண்டி
  • இந்தியாவின் முதல் பெண் பத்திரிக்கையாளர்-சுவர்ணகுமாரி தேவி (ராம்பூதோதானி பத்திரிக்கை)
  • இந்தியாவின் முதல் பெண் விமான ஓட்டி-காப்டன் துர்கா பானர்ஜி
  • இந்தியாவின் முதல் பெண் மேயர்-தாரா செரியன்
  • இந்தியாவின் முதல் பெண் துணை வேந்தர்-அன்சா மேத்தா (பரோடா பல்கலைகழகம்)
  • இந்தியாவின் முதல் பெண் பேருந்து ஓட்டுநர்-வசந்த குமாரி (தமிழ்நாடு)
  • இந்தியாவின் முதல் பெண் விண்வெளிப் பெண்மனி-கல்பனா சாவ்லா
  • இந்தியாவின் முதல் பெண் ரயில் இஞ்சின் ஓட்டுனர்-சுரோகா யாதவ்
  • இந்தியாவின் முதல் பெண் டி.ஜி.பி. (DGP)-இகஞ்சன் சௌத்ரி பட்டாச்சார்யா
  • இந்தியாவின் முதல் பெண் ராணுவ கமாண்டன்ட்-புனிதா அரோரா
  • இந்தியாவின் முதல் பெண் ஏர்ஃசிப் மார்ஷல்-பத்மாவதி பந்தோபாத்யாயா
  • இந்தியாவின்  முதல் பெண் சபாநாயகர் ஷானாதேவி (கர்நாடகா). 
  • முதல் பெண் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி லீலா சேத். 
  • முதல் பெண் விமானப்படை பைலட் அனிதா கௌர். 
  • ஒலிம்பிக்ஸில் பதக்கம் வென்ற முதல் பெண்மணி கர்ணம் மல்லேஸ்வரி.
  • மிஸ் வேர்ல்ட் பட்டம் பெற்ற முதல் பெண்மணி ரீட்டா பரீரா.
  • மிஸ் யுனிவர்ஸ் பட்டம் பெற்ற முதல் பெண்மணி சுஷ்மிதா சென்.
  • இங்கிலீஷ் கால்வாயை நீந்திக் கடந்த முதல் பெண்மணி ஆர்த்தி குப்தா.
  • எவரெஸ்டில் ஏறிய முதல் பெண்மணி பச்சேந்திரிபால்.
  • நோபல் பரிசு பெற்ற முதல் பெண்மணி அன்னை தெரஸா.
  • இந்திய தேசிய காங்கிரஸின் முதல் இந்தியப் பெண் தலைவர் சரோஜினி நாயுடு.
  • முதல் பெண் வழக்கறிஞர் ரெஜினா குகா (1922).
  • ஞானபீட பரிசு பெற்ற முதல் பெண்மணி மஹா ஸ்வேதாதேவி.
  • முதல் பெண் மருத்துவர் ஆனந்தபாய்ஜோஷி.
  • முதல் பெண் பொறியாளர் லலிதா (1937).
  • முதல் பெண் துணைவேந்தர் ஹன்சா மேத்தா.
  • இந்திய தேசிய காங்கிரஸின் முதல் பெண் தலைவர் அன்னிபெசன்ட்.  
நன்றி !!! eegarai.net